என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை சென்ட்ரல்"
- சென்னை சென்ட்ரல்- கூடூர் வழித்தடத்தில் ரெயில்வே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
- இதனால் 17ஆம் தேதி காலை 9.25 மணி முதல் பிற்பகல் 2.25 மணி வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படும் என அறிவிப்பு.
வருகிற 17ஆம் தேதி சென்னை மூர் மார்க்கெட்டிலிருந்து கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 21 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல்- கூடூர் வழித்தடத்தில் ரெயில்வே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 17ஆம் தேதி காலை 9.25 மணி முதல் பிற்பகல் 2.25 மணி வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் 150 ஆண்டுகள் பழமையான ரெயில் நிலையம் ஆகும்.
- ரெயில்கள் குறித்த விவரங்களை பயணிகள் தெரிந்து கொள்ள தகவல் மையங்கள் செயல்படும்.
சென்னை:
இந்தியாவில் முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் நேற்று முதல் அமைதியான ரெயில் நிலையமாக மாறியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் 150 ஆண்டுகள் பழமையான ரெயில் நிலையம் ஆகும். இங்கிருந்து தமிழகத்தின் பிற பகுதிகள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
தினமும் 46 ஜோடி ரெயில்கள் உள்பட 200 எக்ஸ்பிரஸ் ரெயில்களை சென்ட்ரல் ரெயில் நிலையம் கையாளுகிறது. தினமும் சராசரியாக 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர்.
ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் வசதிக்காக புறப்படும் ரெயில்களின் எண்., சேரும் இடம், புறப்படும் நேரம் மற்றும் நடைமேடை எண் போன்ற தகவல்கள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வந்தது.
அதேபோல் வெளியூர்களில் இருந்து வரும் ரெயில்கள், புறப்பட்ட ஊர், ரெயில் எண், வந்து சேரும் நேரம் மற்றும் நடைமேடை எண் போன்ற விவரங்களும் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. ஈரோட்டை சேர்ந்த டப்பிங் கலைஞரும், கல்லூரி விரிவுரையாளருமான கவிதா முருகேசன் தமிழ் அறிவிப்புகளுக்கு குரல் கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை `அமைதியான ரெயில் நிலையம்' என்று அறிவித்து தெற்கு ரெயில்வே உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் வெளியிட்டுள்ள உத்தரவில், "சென்ட்ரல் ரெயில் நிலையம் அமைதியான ரெயில் நிலையமாக மாறுவதால் இனி ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்படாது.
அதற்கு பதிலாக, ரெயில்கள் புறப்பாடு, வருகை, ரெயில் எண், நடைமேடை போன்ற விவரங்கள் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பப்படும்.
எனவே அனைத்து டிஜிட்டல் தகவல் பலகைகளும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். பயணிகளின் வசதிக்காக தகவல் மையங்களில் போதுமான ஊழியர்களை அதிகாரிகள் நியமிக்க வேண்டும்" என்று கூறி இருந்தார்.
அதன்படி சென்ட்ரல் ரெயில் நிலையம் நேற்று முதல் அமைதியான ரெயில் நிலையமாக மாறியது.
விமான நிலையங்கள் போல, நிமிடத்துக்கு நிமிடம் ரெயில்கள் குறித்த விவரங்கள் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பானது.
அதைப்பார்த்து பயணிகள் விவரங்களை தெரிந்து கொண்டு பயணம் செய்தனர்.
பயணிகளின் வசதிக்காக சென்ட்ரல் ரெயில் நிலையம் முன்பு பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பஸ் நிறுத்தம், புறநகர் ரெயில் முனையம், வால்டாக்ஸ் சாலையில் 5-ம் எண் கேட் ஆகிய 3 நுழைவு பகுதிகளிலும் தமிழ், ஆங்கிலம், இந்தியில் ரெயில்களின் வருகை மற்றும் புறப்பாடுகளை காட்டும் பெரிய டிஜிட்டல் திசைகள் வைக்கப்பட்டுள்ளன.
மமாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக நுழைவு ரெயிலில் பிரெய்லி நெத்துக்களுடன் கூடிய வரைபடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவை அவர்களுக்கு வழிகாட்டுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் சைகை மொழி வீடியோ மூலம் அறிய கியூஆர் குறியீடுகள் ஒட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், சென்னை சென்ட்ரலில் சோதனை ரீதியாக அறிவிப்புகளை ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பது நிறுத்தப்பட்டு டிஜிட்டல் பலகையில் மட்டும் தகவல்களை பெறும் நடைமுறையில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. எனவே, ரெயில்கள் குறித்த விவரங்களை பயணிகள் தெரிந்து கொள்ள தகவல் மையங்கள் செயல்படும். பயணிகளின் தேவைக்கு ஏற்ப தகவல் மையங்கள் அதிகரிக்கப்படும். பயணிகளின் வரவேற்புக்கு ஏற்ப அமைதி ரெயில் நிலையம் என்ற நிலை நிரந்தரமாக்கப்படும் என்றனர்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ஒலிபெருக்கி அறிவிப்புகள் இல்லாதது எந்தவித ஏமாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. டிஜிட்டல் பலகையில் அறிவிப்பு வெளியாவதால் ரெயில்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள வசதியாக உள்ளது என்றனர்.
ஆனால் சில பயணிகள் கூறுகையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஒலிபெருக்கி அறிவிப்பு இல்லாதது கடைசி நேரத்தில் வரும் பயணிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. ரெயில் பயணிகளை விமான பயணிகளுடன் ஒப்பிட முடியாது என்றனர்.
- பொதுமக்கள் சாலையை எளிதில் கடந்து செல்வதற்கு பெரிதும் அவதிப்பட்டனர்.
- புதிய சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் மெட்ரோ ரெயில் சார்பில் நடந்தது.
சென்னை:
சென்னை சென்ட்ரல் அருகே பொதுமக்கள் சாலையை எளிதில் கடந்து செல்ல நகரும் படிக்கட்டு வசதியுடன் புதிய சுரங்கப் பாதை விரைவில் திறக்கப்படவுள்ளது.
சென்னை சென்ட்ரல் மெமோரியல் ஹால் அருகில் வாகன நெரிசல் தினமும் அதிகரித்து வருகிறது. இதன் அருகில் அமைந்து உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் இந்த சிக்னல் பகுதியில் நீண்ட நேரமாக காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டு வந்தது.
இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் சாலையை எளிதில் கடந்து செல்வதற்கு பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் அங்கு பொது மக்கள் சாலையை எளிதில் கடந்து செல்ல வசதியாக நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) புதிய சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் மெட்ரோ ரெயில் சார்பில் நடந்தது.
இந்த புதிய சுரங்கப் பாதை பணிகள் முழுவதும் நிறைவடைந்து உள்ளன.பொதுமக்கள் சுரங்க நடைபாதையில் எளிதில் செல்ல நகரும்படிக்கட்டு (எஸ்கலேட்டர்) வசதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சுரங்கப்பாதை வழியாக பொது மக்கள் சாலையை கடந்து மறுபுறம் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு எளிதில் செல்லலாம். இதற்காக புதிய சுரங்கப் பாதையின் நுழைவு வாயில் அருகே இரு புறமும் 2 'எஸ்கலேட்டர்கள்' மற்றும் கிரானைட் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. சுரங்கப்பாதையின் சுவர்களில் பொதுமக்களை கவரும் வகையில் அழகிய இயற்கை காட்சி ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.
இந்த புதிய சுரங்க நடை பாதையால் பொதுமக்கள் நீண்ட நேரம் அங்குள்ள சிக்னல் பகுதியில் காத்திருப்பது தவிர்க்கப்பட உள்ளது.
பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த நவீன சுரங்க நடைபாதையை விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
- பிற்பகல் 1.30 மணிக்கு, குழந்தை கடத்தப்பட்ட நிலையில், 4 மணி நேரத்தில் மீட்பு.
- வடகிழக்கு மாநில தம்பதியின் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது.
எண்ணூர் பகுதியில் குழந்தையை விற்பதற்கு விலை பேசியபோது போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, கார்த்திக், செல்வம் என்ற இருவரை எண்ணூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு, குழந்தை கடத்தப்பட்ட நிலையில், 4 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வடகிழக்கு மாநில தம்பதியின் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சம்பவத்தால் தபால் நிலையத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
- காயம் அடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அல்லி குப்பம் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. தபால் நிலையம் அமைந்துள்ள கட்டிடத்தின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஊழியர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த தபால் நிலைய ஊழியர்களான ரகுபதி மற்றும் சிவா ஆகிய இருவரையும் அங்கு இருந்த மற்ற ஊழியர்கள் மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் தபால் நிலையத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காயம் அடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- சென்னை சென்ட்ரல் கோபுரம் ஒரு முக்கியமான செயல்பாட்டு மையமாக கருதப்படுகிறது.
- நகரத்தின் லட்சியத்தையும் மாற்றத்தையும் குறிக்கும் ஒரு பெருமைமிக்க அடையாளமாக திகழ்கிறது.
சென்னை சென்ட்ரல் கோபுரத்தின் மேம்பாட்டிற்கான கட்டுமானம், கட்டிடக்கலை, மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள் போன்ற பணிகளின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் போன்ற பணிகளுக்கு ரூ.349.99 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (TIDCO) இணைந்து உருவாக்கிய சிறப்பு நோக்கத்திற்கான நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் (CMAML), பிரபலமான சென்னை சென்ட்ரல் கோபுரத்தை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் Renaatus Projects Private நிறுவனத்திற்கு ரூ.349.99 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் (LOA) 12.12.2024 அன்று வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் / சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் எம்.ஏ.சித்திக், இ.ஆ.ப. அவர்களின் முன்னிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் / சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் திரு.தி.அர்ச்சுனன் மற்றும் Renaatus Projects Private நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.எஸ்.மனோஜ் பூசப்பன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் ரேகா பிரகாஷ். (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), மற்றும் திரு. டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), திரு.ஜி.தணிகைசெல்வன் (திட்ட மேலாளர்). சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை சென்ட்ரல் கோபுரம் உலகளாவிய பெருநகரமாகவும், பன்முக போக்குவரத்து மையமாகவும் மாறுவதை குறிக்கும் ஒரு முக்கியமான திட்டமாகும். சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு அருகில் அமையவுள்ள இந்த 27 மாடி கட்டிடம் தொடர்புகள், தற்போதைய வசதிகள் மற்றும் நிலையான பராமரிப்பு முறைகள் அனைத்தையும் இணைக்கும் வகையில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சென்னை சென்ட்ரல் கோபுரம். சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்கள், ஆற்றல் திறன்மிக்க அமைப்புகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கியது. நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்கான முன்னோடியாக அமைந்துள்ளது.
சென்னை சென்ட்ரல் கோபுரம் ஒரு முக்கியமான செயல்பாட்டு மையமாக கருதப்படுகிறது. வணிகம் ஓய்வு மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றுக்கு கவனமாக வடிவமைக்கப்பட்ட இடங்களை வழங்கும் இந்த கோபுரம், குடியிருப்பாளர்கள், பயணிகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வருகை தரும் பார்வையாளர்களுக்கு ஒரு இணக்கமான சூழலை உருவாக்கும். அதன் அதிநவீன உள்கட்டமைப்பு நகரத்தின் இணைப்பு, பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்த சென்னை சென்ட்ரல் கோபுரம், வளர்ச்சி, புதுமை மற்றும் வாய்ப்புகளை குறிக்கிறது. இது நகரத்தின் லட்சியத்தையும் மாற்றத்தையும் குறிக்கும் ஒரு பெருமைமிக்க அடையாளமாக திகழ்கிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.