என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டுத்தீ பற்றி பயிர்கள் எரிந்து நாசம்"

    • கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெப்பம் நிலவியதால் செடி, கொடிகள், புல்வெளிகள், முட்புதர்கள் காய்ந்து கருகி வருகின்றன.
    • தீ காரணமாக அரசு வருவாய் நிலங்கள் மற்றும் தனியார் தோட்டப்பகுதிகளில் ஆங்காங்கே தீ எரிந்து வருகிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெப்பம் நிலவியதால் செடி, கொடிகள், புல்வெளிகள், முட்புதர்கள் காய்ந்து கருகி வருகின்றன.

    இந்நிலையில் விவசாயிகள் தனியார் தோட்டப்பகுதியில் வைக்கும் தீ காரணமாக அரசு வருவாய் நிலங்கள் மற்றும் தனியார் தோட்டப்பகுதிகளில் ஆங்காங்கே தீ எரிந்து வருகிறது. பழனி பிரதான மலைச்சாலையில் மேல்பள்ளம் மற்றும் ஜீவா நகர் பகுதிகளில் உள்ள தனியார் தோட்டத்துப்பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் வாழை, ஆரஞ்சு, எலுமிச்சை, அவக்கோடா உள்ளிட்ட பணப்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தது. இந்த பகுதிகளில் காட்டுத்தீ மளமள வென பரவி கொளுந்து விட்டு எரிந்து வருகிறது.

    மேலும் சாலையின் ஓரங்களிலும் தீ எரிந்து வருவதால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. வனப்பகுதிக்கு அருகே தீ எரிந்து வருவதால் தீயை அணைக்கும் முயற்சியில் பெரும்பள்ளம் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    தனியார் இடங்களில் சிலர் தீ வைக்கின்றனர். காற்றின் வேகம் அதிகரிக்கும்போது அருகே உள்ள மற்ற தோட்டப்பகுதிகளில் தீ பரவி வருகிறது. எனவே தனியார் தோட்டப்பகுதிகளில் அனுமதியின்றி தீ வைக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    இந்நிலையில் இன்று காலை முதல் கொடைக்கானல் நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டது.

    ×