என் மலர்
நீங்கள் தேடியது "டிஜிட்டல் பேனர்"
- தமிழகமெங்கும் பேனர் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே பண்ருட்டி பகுதியில் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
- பண்ருட்டியில் டிஜிட்டல் பேனர் வைக்க போலீசாதடை விதித்துள்ளனர்.
க்டலூர்:
பண்ருட்டியில் டிஜிட்டல் பேனர் வைக்க போலீசாதடை விதித்துள்ளனர்இ து குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கண்ணன்வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்கூறியிருப்பதாவது:- தமிழகமெங்கும் பேனர் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே பண்ருட்டி பகுதியில் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளிலோ விழா நடைபெறும்
மண்டபங்களிலோ விழாவிற்கு முதல் நாளில் மிகச் சிறிய அளவிலான பேனர்களை வைத்து விழா முடிவடைந்ததும் அகற்றி விடலாம். உங்கள் நகரை சிங்கார நகரமாக மாற்ற போலீசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுங்கள். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
- பேனர்களை நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் வருகிற 27-ந்தேதி நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தர உள்ளார். அவரை வரவேற்று திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் எதிரே வைக்கப்பட்டிருந்த பேனர்களை நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர். இதையறிந்த அக்கட்சி நிர்வாகிகள் இன்று காலை புதிய பேருந்து நிலையம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பேனர்களை கிழித்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பா.ஜ.க.வினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.