search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டூடியோ"

    • பெங்களூரில் டாட்டூ சூத்ரா ஸ்டூடியோ வைத்திருக்கும் கலைஞர் ரிதேஷ் அகாரியா
    • அவரது நெஞ்சில் “F**k the police” என்று எழுத சொல்லியதாக தெரிவித்துள்ளார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள டாட்டூ கலைஞர் ஒருவர் "F**k the police" என்று நபர் ஒருவரின் நெஞ்சில் குத்திய டாட்டூவை இணையத்தில் பகிர்ந்து வம்பை விலை கொடுத்து வாங்கியுள்ளார். பெங்களூரில் டாட்டூ சூத்ரா ஸ்டூடியோ வைத்திருக்கும் ரிதேஷ் அகாரியா என்ற நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நபர் ஒருவரின் நெஞ்சில் "F**k the police" என்று எழுதப்பட்டிருந்த டாட்டூவை பகிர்ந்ததிலிருந்தே இந்த பிரச்சனை தொடங்கியுள்ளது.

     

    இந்த புகைப்படம் வைரலாக நிலையில் போலீசின் கவனத்துக்கும் இது சென்றுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரிதேஷ், தனது கடைக்கு வந்த வெளிநாட்டுக்காரர் ஒருவர் அவரது நெஞ்சில் "F**k the police" என்று எழுத சொல்லியதாக தெரிவித்துள்ளார்.

    இருந்தபோதிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக டாட்டூ கலைஞர் ரிதேஷ் அகாரியா மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 352 இந்த கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    பாலமுருகனின் ஸ்டூடியோவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பால முருகனுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகேயுள்ள கட்டமுத்துபாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 29). இவர் பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் ஸ்டூடியோ வைத்துள்ளார். இன்று முகூர்த்த தினம் என்பதால் இவருக்கு திருமண ஆர்டர் கிடைத்தது. இதற்காக நேற்று மாலையில், கடையை பூட்டிவிட்டு ஊழியர்களை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.இந்நிலையில் ஸ்டூடியோவிற்கு அருகில் உள்ள கடைக்காரர்கள் இன்று காலையில் அவர்களது கடையை திறக்க வந்தனர். அப்போது பாலமுருக னின்விஸ்டூடியோன் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக பால முருகனுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். அவர் பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பாலமுருகனும், போலீசாரும் விரைந்து வந்தனர்.ஸ்டூடியோவிற்குள் சென்று பார்த்த போது, உயர்ரக டிஜிட்டல் கேமிரா, டிரோன் கேமிரா, லேப்டாப், சேமிப்பு உண்டியல் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தடயங்களை போலீசார் சேகரித்தனர். இது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
    • மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது .

    உடுமலை :

    உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உடுமலை அண்ணா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த வர்கீஸ் என்பவர் ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.இந்த நிலையில் அதிகாலை 3 மணி அளவில் இவரது கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் .இருப்பினும் கடையில் இருந்த கேமராக்கள், பிரிண்டர் மற்றும் மின்சாதன பொருட்கள் உட்பட ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து முற்றிலும் சாம்பலானது. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது .

    தீ விபத்து குறித்து உடுமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய பஸ் நிலையம் அருகில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×