என் மலர்
நீங்கள் தேடியது "நீரவ் மோடி"
- டொமினிகா நாட்டிற்கு தப்பிச் சென்றார்.
- பெல்ஜியத்தின் தற்காலிக குடியுரிமையை பெற்றுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரிகளான நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்றனர்.
இது தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையே கரீபியன் நாடான ஆண்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்சி, 2021ம் ஆண்டு டொமினிகா நாட்டிற்கு தப்பிச் சென்றார்.
இந்த நிலையில் மெகுல் சோக்சி, ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மெகுல் சோக்சியின் மனைவி பிரீத்தி, பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர்.
அவர் மூலம் மெகுல் சோக்சி பெல்ஜியத்தின் தற்காலிக குடியுரிமையை பெற்றுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி அவருக்கு பெல்ஜியத்தின் எப் ரெசிடென்சி கார்டு விசா வழங்கப்பட்டு உள்ளது. குடியுரிமை பெறுவதற்காக மெகுல் சோக்சி இந்தியா, ஆண்டிகுவா குடியுரிமைகளை மறைத்து போலி தகவல்களை சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது மெகுல் சோக்சி பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வருவதாக தெரிகிறது. மெகுல் சோக்சி பெல்ஜியத்தின் நிரந்தர குடியுரிமையை பெற்றால் அவர் எளிதாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வர முடியும். இதையடுத்து அவரை நாடு கடத்த பெல்ஜியத்தில் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
- இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக எனது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என்றார்.
- எனக்கு இந்தியாவில் நியாயமான விசாரணை கிடைக்காது என்றார் நிரவ்மோடி .
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் மோசடியில் ஈடுபட்டதாக புகாரில் சிக்கிய பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி லண்டன் தப்பியோடினார்.
பணத்தை திருப்பி செலுத்தாததால் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வங்கி தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று லண்டனில் அவர் கைது செய்யப்பட்டார். லண்டனில் உள்ள வான்ட்ஸ் வொர்த் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அதற்கான செலவுத் தொகையை நிரவ் மோடியே செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து நிரவ் மோடி நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு லண்டனில் உள்ள பாக்கிங்சைட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி மூலம் ஆஜரான நிரவ் மோடி தன்னை நாடு கடத்துவதற்கு எதிரான மேல் முறையீட்டுக்கான செலவு தொகை 150,247 பவுண்டுகள் (ரூ.146 லட்சம்) செலுத்த பணம் இல்லை. என்னுடைய சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது .
எனவே என்னால் பணம் செலுத்த முடியவில்லை என்றார்.
அப்போது நீதிபதிகள் அவரிடம் சொத்துக்கள் ஏன் முடக்கப்பட்டன என்று கேள்வி எழுப்பினர். அதற்கு நிரவ்மோடி பதில் அளிக்கையில், எனது பெரும்பாலான சொத்துக்கள் இந்தியாவில் உள்ளன. அங்கு நான் கடந்த 30 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக எனது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என்றார்.
அப்படியென்றால் அபராதத்தொகையாக மாதம் 10 ஆயிரம் பவுண்டுகள் (ரூ.9.7 லட்சம்) எப்படி செலுத்திகிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு நிரவ்மோடி கூறுகையில், "நான் கடந்த 4 ஆண்டுகளாக இங்கு சிறையில் இருக்கிறேன். எனது முதல் 2 வருடங்களில் கையில் இருந்த நிதி செலவாகிவிட்டது. எனவே கடந்த 2 ஆண்டுகளாக நான் மாதம் 10 ஆயிரம் பவுண்டுகள் கடன் வாங்கி அபராதம் செலுத்துகிறேன் என்றார்.
உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை என்றால் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ஏன் இந்தியாவிற்கு திரும்பவில்லை என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு நிரவ் மோடி எனக்கு இந்தியாவில் நியாயமான விசாரணை கிடைக்காது என்றார்.
- விஜய் மல்லையா சொத்துகளை விற்பனை செய்து 14,131.6 கோடி ரூபாய் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டது.
- நீரவ் மோடியின் சொத்துகளை விற்பனை செய்து 1052.58 கோடி ரூபாய் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டது.
தொழில் அதிபரான விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் கடன் பெற்றிருந்தார். வங்கிகளிடம் பெற்ற கடனை திருப்பி கட்ட முடியாத நிலையில், வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். அதேபோல் வைர வியாபாரியான நீரவ் மோடியும் வங்கிகளில் கடன் பெற்று, பின்னர் கட்ட முடியாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்.
இதுபோன்று பல தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் பெற்ற கடன்களை திரும்பப் பெற முடியாமல் உள்ளள. இந்த நிலையில் நேற்று மக்களவையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமலாக்கத்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு முறைகேடு செய்தவர்களின் சொத்துகளை விற்பனை செய்து 22,280 கோடி ரூபாயை வங்கிகளுக்கு அளித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட விஜய் மல்லையா சொத்துகளை விற்பனை செய்து 14,131.6 கோடி ரூபாய் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டது.
அதேபோல் நீரவ் மோடியின் சொத்துகளை விற்பனை செய்து 1052.58 கோடி ரூபாய் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு அளிக்கப்பட்டது.
தேசிய ஸ்பாட் எக்சேஞ்ச் லிமிடெட் முறைகேட்டில் 17.47 கோடி ரூபாய் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஆர்.எஸ். குரூப் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை விற்பனை செய்து 20.15 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.
ரோஸ்வேலி குரூப் (Rose Valley Group) 19.40 கோடி ரூபாய்
சூர்யா பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட்- 185.13 கோடி ரூபாய்
நவேரா சேக் மற்றும் மற்றவர்களின் மதிப்புகள் (ஹீரா குரூப்) - 226 கோடி ரூபாய்
மெகுல் சோக்சி மற்றும் மற்றவர்களிடம் இருந்து - 2,565.90 கோடி ரூபாய்
நாயுடு அம்ருதேஷ் ரெட்டி மற்றும் மற்ற மதிப்புகள்- 12.73 கோடி ரூபாய்
வங்கிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார குற்றங்களைச் செய்த எவரையும் தனது அரசாங்கம் விட்டுவைக்கவில்லை.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.