என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிப்காட் தொழிற்பூங்கா"

    • தருமபுரி சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் சாந்தி இன்று அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
    • ரூ.14.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

    தொப்பூர், 

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி எல்லைக்குட்பட்ட சிப்காட் அமையவிருக்கும் 100 அடி சாலையில் தருமபுரி சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் சாந்தி இன்று அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

    தருமபுரி வட்டம் அதகப்பாடி, நல்லம்பள்ளி வட்டம் தடங்கம், அதியமான்கோட்டை மற்றும் பாலஜங்கமனஅள்ளி ஆகிய கிராமங்களில் நிலஎடுப்பு செய்து சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

    சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்திற்கு தேசிய நெடுஞ்சாலை-44லிருந்து 1.35 கி.மீ. தூரமுள்ள சாலை மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.14.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

    சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க சுற்றுசூழல் அனுமதி பெற ITCOT நிறுவனத்தின் மூலம் முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தருமபுரி சிப்காட் தொழிற்பூங்காவில் தொழிற்சாலைகளை அமைக்க பல முன்னணி நிறுவனங்கள் பார்வையிட்டு தேவையான நிலங்களை ஒதுக்க சிப்காட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

    தருமபுரி சிப்காட் தொழிற்பூங்காவில் OLA Electric Mobility Pvt. Ltd. நிறுவனம் தொழிற்சாலை அமைக்க 700 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய ஆணையிடப்பட்டு நிலம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஷ்வரன் (தருமபுரி), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, தருமபுரி நகரமன்ற தலைவர் லட்சுமி, நல்லம்பள்ளி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி, நல்லம்பள்ளி ஒன்றியக்குழு உறுப்பினர் முருகன், தடங்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் பெரியண்ணன், சிவப்பிரகா சம், வட்டாட்சியர்கள் வெங்கடே ஷ்வரன் (சிப்காட்), ஆறுமுகம் (நல்லம்பள்ளி) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    • விளைநிலங்களை பாதுகாக்கும் விஷயத்தில் அரசு இரட்டை நிலைகளை கடைப்பிடிக்கக்கூடாது.
    • எதிர்ப்பு தெரிவிக்கும் உழவர்களின் உணர்வுகளை மதிக்காமல் அடக்குமுறையை ஏவி நிலங்களைப் பறிக்க அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் வளாகத்தின் விரிவாக்கத்திற்காக மேல்மா, குறும்பூர் உள்ளிட்ட 11-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 2700 ஏக்கருக்கும் கூடுதலான விளைநிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. எதிர்ப்பு தெரிவிக்கும் உழவர்களின் உணர்வுகளை மதிக்காமல் அடக்குமுறையை ஏவி நிலங்களைப் பறிக்க அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.

    விளைநிலங்களை பாதுகாக்கும் விஷயத்தில் அரசு இரட்டை நிலைகளை கடைப்பிடிக்கக்கூடாது. அன்னூர் பகுதியில் சிப்காட் அமைக்க நிலங்களை கையகப்படுத்த உழவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்தது. அந்த நிலைப்பாட்டை தமிழகத்தின் பிற பகுதிகளில் கடைபிடிக்க தமிழக அரசு மறுப்பது தவறு. தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கை அறிவிப்பாக தமிழக அரசு வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 1,213 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது
    • தோல் காலணி மற்றும் துணைப்பொருட்கள் தொகுப்பு அமைக்க முடிவு

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பனப்பாக்கம் கிராமத்தில் 1213.43 ஏக்கரில் தொழில் பேட்டை அமையும் இடத்தை அமைச்சர்கள் ஆர்.காந்தி, டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த தொழிற்பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு சுமார் 1,213 ஏக்கர் நிலம் கையகபடுத்தப்பட்டது. தொழிற்பூங்காவுக்கு தேவையான நிலம் நெடும்புலி, துறையூர், பெருவளையம், அகவலம் ஆகிய கிராமங்களிலிருந்து கையகப்படுத்தபட்டது. இதில் சுமார் 300 ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு ஆகும்.

    அப்பூங்காவில் 351.89 ஏக்கர் பரப்பிலான நிலம் சிப்காட் மூலம் கையகப்படு த்தப்பட்டுள்ளது. சிப்காட் நிறுவனம் இப்பூங்காவில் 300 ஏக்கர் நிலபரப்பில் பெரும் தோல் காலணி மற்றும் துணைப்பொருட்கள் தொகுப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதில் 201 ஏக்கர் நிலபரப்பில் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்படுகிறது.

    அந்தசிறப்பு பொருளாதார மண்டலத்தில் 125 ஏக்கர் நிலபரப்பில் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு கொள்கை ஒதுக்கீட்டு ஆணைப்படி நில ஒதுக்கீடு ஆணைப்படி வழங்கப்பட்டுள்ளது.

    இப்பணிகளை துரிதமாக மேற்கொண்டு குறித்த காலத்திற்குள் நிறைவு செய்ய தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மற்றும் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் அலுவலர்களை கேட்டுக்கொண்டார்கள்.

    இந்த ஆய்வின் போது மேலாண்மை இயக்குனர் சிப்காட் சுந்தரவல்லி,ஆற்காடு ஜெ.எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., சிப்காட் கண்காணிப்பு பொறியாளர் தேவஇரக்கம். ராணி ப்பேட்டை சிப்காட் திட்ட அலுவலர் மகேஸ்வரி, நில எடுப்பு துணை ஆட்சியர் அகிலாதேவி, நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு. பனப்பாக்கம் பேரூராட்சி தலைவர் கவிதா, நில எடுப்பு வட்டாட்சியர் ஜெயபி ரகாஷ். நெமிலி வட்டாட்சியர் பாலசுந்தர், சயனாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி, நெமிலி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பெருமாள், ரவீந்திரன் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்போரூரில் உள்ள Godrej உற்பத்தி ஆலை வருகிற டிசம்பர் திறக்கப்பட உள்ளது.
    • ஓசூரில் கண்டிப்பாக விமான நிலையம் அமையும்.

    தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவித்தார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 1,500 ஏக்கர் பரப்பளவில் புதிய SIPCOT தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் 1,000 ஏக்கர் பரப்பளவில் புதிய SIPCOT தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.

    கரூர் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதம் புதிய மினி Tidel Park அமைக்கப்படும்.

    அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் வட்டத்தில் சுமார் 175 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.

    திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்தில் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மற்றும் மன்னார்குடி வட்டங்களில் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

    காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் சுமார் 750 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

    சென்னை வெளிவட்டச் சாலையை ஒட்டி சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.

    தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு 2,100 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.

    திருப்போரூரில் உள்ள Godrej உற்பத்தி ஆலை வருகிற டிசம்பர் திறக்கப்பட உள்ளது.

    தமிழ்நாட்டை விண்வெளி தொழிலில் முன்னணி மாநிலமாக மேம்படுத்த விண்வெளி தொழில் கொள்கை வெளியிடப்படும்.

    சுழற்பொருளாதார துறைகளில் முதலீடுகளை அதிகரிக்கும் பொருட்டு, தமிழ்நாடு சுழற்பொருளாதார முதலீட்டு ஊக்குவிப்பு கொள்கை வெளியிடப்படும்

    முதலீடுகளை ஊக்குவிக்க உதவியாக 'Guidance TamilNadu' நோடல் ஏஜென்ஸியின் கிளை அலுவலகம் கோயம்புத்தூரில் அமைக்கப்படும்.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 'Guidance TamilNadu' நோடல் ஏஜென்ஸியின் ஊக்குவிப்பு அமைவு(Japan Desk) உருவாக்கப்படும்.

    ஓசூரில் புதிய விமான நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வெளியே இருக்கும் சிலர், இதில் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

    தீவிர ஆய்வுக்கு பிறகே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கண்டிப்பாக விமான நிலையம் அமையும். கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் வெகுவிரைவில் தொடங்கும். சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு நிலம் எடுப்பு தொடங்கிவிட்டது.

    தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு 2100 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.

    ஆலங்குளம் சிமெண்ட் ஆலையில் எம்-சாண்ட் உற்பத்தி ஆலை சுமார் 25 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாட்டின் தொழில் துறையில் இன்று பெண்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றுகின்றனர்.
    • தமிழ்நாட்டின் சிறு தொழில் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வரக்கூடியவர் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.

    செங்கல்பட்டில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    நீர் நிலைகளும், ஏரிகளும் நிறைந்து நீர் நிலைகளில் செங்கலு நீர் பூக்கள் அதிகமாக இருப்பதால் செங்கலு நீர்பட்டு என்று அழைக்கப்பட்டு இன்றைக்கு தலைநகர் சென்னையோட நுழைவு வாயிலாக இருக்க கூடிய இந்த செங்கல்பட்டு. சிற்பக் கலையும், அதனுடைய சிறப்பையும் தமிழ் கலை பெருமையை சொல்லும் மாமல்லபுரம் உள்ள மாவட்டம் இந்த செங்கல்பட்டு. அப்படிப்பட்ட இந்த மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியில் சிறந்து கழக ஆட்சி காலத்தில் மகேந்திரா, விப்ரோ, பி.எம்.டபிள்யூ. பிலெக்டரானிக்ஸ், பாக்ஸ் கான், டெல், சாம்சங், இன்போசிஸ், டி.வி.எஸ்., சீமென்ஸ், நிதான், போர்ட், அப்பல்லோ டயர்ஸ், பல்லாவரத்தில் தமிழ்நாடு டாடா பார்மா சூட்டில்கல் தொழிற்சாலை.

    மறைமலைநகரில் மெட்ராஸ் மெக்னடிக் மீடியா லிமிடெட் தொழிற்சாலை 532 ஏக்கர் நிலத்தில் எம்.பி.பி.எல். புதுப்பிக்கப்பட்ட நிறுவனம், திருப்போரூரில் 500 ஏக்கர் பரப்பளவில் எந்திரங்கள் மூலம் உப்பு உற்பத்தி தொழிற்சாலை, ஸ்ரீராம் ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, சிங்கபெருமாள் கோவில் அருகே மகேந்திரா நிறுவனத்தின் சார்பில் எந்திர உதிரிபாகங்கள் தயாரிக்கிற தொழிற்சாலை இப்படி தமிழ்நாட்டோட வளர்ச்சிக்கான நுழைவு வாயிலை உருவாக்கியது நம்முடைய திராவிட முன்னேற்ற கழக ஆட்சி.

    இயற்கை வளம், கலைப்பெருமை, தொழில் வளர்ச்சி என சிறந்து விளங்கும் இந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த அரசு விழாவை மிகப்பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்திருக்க கூடிய பொறுப்பு அமைச்சர் தா.மோ.அன்பரசனை மனதார பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

    ஏராளமான குறு-சிறு நடுத்தர நிறுவனங்களை உருவாக்கி, தமிழ்நாட்டின் சிறு தொழில் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வரக்கூடியவர் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.

    முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு இருக்கிறது என்றால் அதிலே இவருடைய பங்கும் இருக்கிறது. அவரது உழைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.

    தமிழ்நாட்டின் தொழில் துறையில் இன்று பெண்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றுகின்றனர். பெண்கள் முன்னேற்றம் குறித்த பெரியாரின் கனவுகளை சட்டத்தின் மூலம் நனவாக்கியவர் கலைஞர். பெண்களுக்கு சொத்தில் சம பங்கு என்ற சட்டம் 7.5.1989-ல் சட்டசபையில் நிறைவேற்றியவர் கலைஞர்.

    பெண்கள் இன்று எல்லா துறைகளிலும் கோலோச்சுகின்றனர். திராவிட மாடல் அரசின் திட்டங்கள் பெண்களுக்கு பொருளாதார தன்னம்பிக்கையை கொடுத்து உள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இப்போது இந்த செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் 800 ஏக்கரில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

    மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என்று திமிராக பேசுகிறார் மத்திய மந்திரி. தேசிய கல்விக்கொள்கை, தமிழ் நாட்டின் கல்வி வளர்ச்சியையே அழித்து ஓழித்து விடும். கல்வியை தனியார் மயமாக்கும் கொள்கைதான் தேசிய கல்விக்கொள்கை. பணக்காரர்களுக்கு மட்டுமே உயர் கல்வி என்ற நிலையை தேசிய கல்விக் கொள்கை ஏற்படுத்தும். கல்வியில் மதவாதத்தை புகுத்த தேசிய கல்வி கொள்கை முயற்சிக்கிறது. கல்வியில் ஒன்றிய அரசின் அதிகார குவிப்புக்கு வழி வகுக்கும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    ×