என் மலர்
நீங்கள் தேடியது "காட்டுப்பள்ளி துறைமுகம்"
- அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான மேத்யூபெர்ரி என்ற போர்க் கப்பல் பழுது பார்ப்பதற்காக வந்தது.
- போர்க்கப்பல் வருகிற 29-ந் தேதி புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னேரி:
காட்டுப்பள்ளி துறைமுகத்தில், 'எல் அண்டு டி' கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்கு இந்திய கடலோர காவல் படைக்கு தேவையான ரோந்து கப்பல்கள் கட்டப்பட்டு வருகிறது. கப்பல் பழுது பார்க்கும் மையமும் உள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 'சார்லஸ் ட்ரூ' என்ற ராணுவ தளவாட கப்பல் பழுது மற்றும் பராமரிப்புக்காக, முதன்முறையாக இந்தியாவுக்கு வந்தது. அந்த கப்பலுக்கு காட்டுப்பள்ளி துறைமுகத்தில் பழுது நீக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 10 நாட்களுக்கு பின்னர் அந்த கப்பல் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
அதன் பழுதுகளை சரி செய்யமுதன் முறையாக அமெரிக்க கப்பற்படையை சேர்ந்த ராணுவ தளவாட கப்பல் இந்தியாவில் பழுது பார்க்க வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு நேற்று மாலை 5 மணியளவில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான மேத்யூபெர்ரி என்ற போர்க் கப்பல் பழுது பார்ப்பதற்காக வந்தது.
அதில் பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்ததும் அந்த போர்க்கப்பல் வருகிற 29-ந் தேதி புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு 2-வது முறையாக அமெரிக்க போர்க்கப்பல் பழுது நீக்க வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- சாம்பல் கழிவுகளை ஏற்றி செல்லும் லாரிகளும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன.
- லாரிகள் செல்ல முடியாத அளவுக்கு சாலை காணப்படுகிறது.
பொன்னேரி:
மீஞ்சூரைஅடுத்த காட்டுப்பள்ளியில் நிலக்கரி கிடங்கு சாலை வடசென்னை அனல் மின்நிலைய குடியிருப்பு முதல் நிலக்கரி சேமிப்பு கிடங்கு வரை 4 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதனை காமராஜர் துறைமுகம் பராமரித்து வருகிறது.
இந்த சாலையை பயன்படுத்தி தினமும் 1000-க்கும் மேற்பட்ட லாரிகள் சேமிப்பு கிடங்கில் இருந்து நிலக்கரிகளை ஏற்றிக்கொண்டு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சென்று வருகின்றன. மேலும் சாம்பல் கழிவுகளை ஏற்றி செல்லும் லாரிகளும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் 4 கிலோ மீட்டர் தூரம் சாலை மிகவும் பழுதடைந்து பல இடங்களில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. இதனால் லாரிகள் செல்ல முடியாத அளவுக்கு சாலை காணப்படுகிறது. சேதம் அடைந்த சாலையில் லாரிகள் செல்லும் போது அதன் டயர்கள் அடிக்கடி கிழிந்து விடுவதால் லாரி டிரைவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
இதுகுறித்து லாரி டிரைவர்கள் கூறும்போது, நிலக்கரி கிடங்கு சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. ஒவ்வொரு லாரியாக சென்று வருவதால் குறித்த நேரத்தில் நிலக்கரியை ஏற்றி செல்ல முடிவதில்லை. நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. கடந்த சில நாட்களில் சேதம் அடைந்த சாலையில் உள்ள ராட்சத பள்ளங்களால் இதுவரை 50-க்கும் மேற்பட்ட லாரிகள் பழுதாகி உள்ளன. எண்ணூர் காமராஜர் துறைமுக நிர்வாகம் சாலையை சீரமைத்து உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.