search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லட்சுமி ஹயக்ரீவர் பூஜை"

    • அவதாரங்களில் ஆதியில் வெளிப்பட்டது ‘ஹயக்ரீவ அவதாரம்’ என்று சொல்லப்படுகிறது.
    • திருமால் எடுத்த முக்கியமான அவதாரமாக ‘ஹயக்ரீவர்’ அவதாரம் பார்க்கப்படுகிறது.

    மகாவிஷ்ணுவின் தசாவதாரம் என்று போற்றப்படும் 10 அவதாரங்களில் முதன்மையானதாக மச்ச அவதாரம் இருந்தாலும், திருமால் எடுத்த அவதாரங்களில் ஆதியில் வெளிப்பட்டது 'ஹயக்ரீவ அவதாரம்' என்று சொல்லப்படுகிறது.

    பிரம்மதேவனிடம் இருந்த வேதங்களை, மது- கைடபர் என்னும் இரண்டு அசுரர்கள் திருடிச் சென்று விட்டனர். அதனை மீட்பதற்காக, திருமால் எடுத்த முக்கியமான அவதாரமாக 'ஹயக்ரீவர்' அவதாரம் பார்க்கப்படுகிறது.


    வேதங்கள், சாஸ்திரங்கள், அறுபத்து நான்கு கலைகள் போன்ற அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குபவர், ஹயக்ரீவர். சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, வியாசர், சுப்பிரமணியர், விநாயகர் ஆகியோரை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

    ஆனால் அவர்களுக்கு அந்த தகுதியானது, கல்விக்கு அதிபதியாக, ஆதாரமாக விளங்கும் ஹயக்ரீவரின் அனுக்கிரகத்தால் கிடைத்தது என்கின்றன புராணங்கள்.

    ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில், பவுர்ணமி திதியில் அவதரித்தவர், ஹயக்ரீவர். அவரது பெருமைகளை எடுத்துரைக்காத வேதம், உபநிடதம், கல்பம், புராணம் என்று எதுவும் கிடையாது. அனைத்துமே அவரது புகழ்பாடுகின்றன.

    ஹயக்ரீவர் எப்போதும் தனியாக இருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது அரிதுதான். அவர், தனது மனைவியாக லட்சுமிதேவியை மடியில் அமர வைத்து 'லட்சுமி ஹயக்ரீவர்' தோற்றத்தில்தான் பெரும்பாலான ஆலயங்களில் தரிசனம் தந்து கொண்டிருக்கிறார்.

    • திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு லட்சுமி ஹயக்ரீவர் யாகபூஜை நடத்தப்பட்டது.
    • யாகபூஜை காலை 9 மணிக்கு சிறப்பு வேள்வியுடன் தொடங்கியது.

    திருப்பூர் :

    திருப்பூர் திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு லட்சுமி ஹயக்ரீவர் யாகபூஜை நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் நல்ல நினைவாற்றலுடனும், தன்னம்பிக்கையுடனும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த பூஜை நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டிற்கான பூஜை கடந்த 26-ந் தேதி திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் தொடங்கியது. இதில் பிளஸ்-2 மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 3-வது வாரமாக இன்று நடைபெற்ற இந்த யாகபூஜை காலை 9 மணிக்கு சிறப்பு வேள்வியுடன் தொடங்கியது.

    இந்த பூஜையையொட்டி மாணவ-மாணவிகளின் பெயர் மற்றும் நட்சத்திரங்கள் உச்சரிக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. முடிவில் மாணவர்கள் அனைவருக்கும் பூஜிக்கப்பட்ட கயிறு, ஹயக்ரீவர் சுலோக அட்டை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×