என் மலர்
நீங்கள் தேடியது "இளம்பெண்-வாலிபர்"
- இளம்பெண்-வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள எம்.புளியங்குளத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 29). இவரது கணவர் போதுராஜா. இவர்களுக்கு குழந்தை இல்லை.
மகாலட்சுமி உடல்நிலை பாதிப்பால் அவதிபட்டு வந்தார். பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமா கவில்லை. இதனால் அவர் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று திருச்சுழி பஸ் நிலையத்திற்கு வந்த மகாலட்சுமி விஷம் குடித்தார். பின்னர் கணவருக்கு போனில் தகவல் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவர் வேகமாக வந்து மனைவியை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
ஆனால் செல்லும் வழியிலேயே மகாலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மகாலட்சு மியின் தாய் அய்யம்மாள் கொடுத்த புகாரின்பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் பரமசிவம் (31). திருமணம் ஆகவில்லை. தனியாக ஆடிட்டிங் தொழில் பார்த்து வந்தார். தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் கடன் வாங்கினார். இந்த நிலையில் கடன் கொடுத்த 0வர்கள் நெருக்கடி கொடுத்ததால் சகோதரர் மாரியப்பனுடன் சேர்ந்து பூர்வீக சொத்தை விற்று கடனை அடைத்தார்.
இதனால் அவர் மனவேத னையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலை யில் சகோதர னுக்கு சொந்த மான நிலத்திற்கு சென்று விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுகுறித்து மாரியப்பன் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லி புத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.