என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கண்சிகிச்சை"
- இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.
- அவர்களுக்கு வீடு திரும்பும் வரை போக்குவரத்து, தங்குமிடம், உணவு இலவசமாக செய்து தரப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் தேதிய பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம், கிருஷ்ணன் கோவில் தனியார் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புசங்கம் உதவியுடன் ராமச்சந்திர ராஜா, சுப்பிரமணியராஜா நினைவாக இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள
ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்க அலுவலகத்தில் முகாம் நடந்தது. ஜானகிராம் மில்ஸ் இயக்குநர் என்.எஸ். சஞ்சய்குமார் ராஜா தொடங்கி வைத்தார். ஐ.என்.டி.யு.சி. மாநில பொருளாளர் பிரபாகரன், விருதுநகர் மாவட்ட தலைவர் கண்ணன், வட்டார பொருளாளர் கிருஷ்ணன்குட்டி, ஜானகிராம் மில்ஸ்
ஐ.என்.டி.யு.சி தலைவர் சுகுமாரன், இணை செயலாளர் கணபதியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கண் மருத்துவ மனை மருத்துவர் விக்னேசுவரி தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்ட 45 பேர் கிருஷ்ணன்கோவில் தனியார் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு வீடு திரும்பும் வரை போக்குவரத்து, தங்குமிடம், உணவு இலவசமாக செய்து தரப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்