search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெபக்கூடம்"

    • பதட்டம் நிலவியதால் போலீஸ் குவிப்பு
    • கட்டிட பணியை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வாத்தியார்விளை கிரவுண்ட் தெருவில் ஒரு வீட்டில் ஜெபக்கூட்டம் நடைபெற்று வந்தது. அங்கு ஜெபக்கூடம் கட்டும் பணி நடந்த போது பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் நேற்று கட்டுமான பணிக்கான பொருட்கள் வந்ததால், எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அங்கு திரண்டனர்.

    மேலும் வாத்தியார்விளை ஊர் தலைவர் வைகுண்டமணி தலைமையில் இந்து முன்னணி, விசுவ இந்து பரிசத் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் வடசேரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களை சமரசம் செய்த துணை சூப்பிரண்டு நவீன்குமார், கட்டுமான பணிகள் குறித்து நாளை (இன்று)பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதுவரை பணிகள் நடக்காது என்றார். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் ஊர் தலைவர் வைகுண்டமணி தலைமையில் ஏராளமானோர் இன்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில், ஜெப கூடம் கட்ட ஏற்கனவே தடை உள்ளது. இது தொடர்பாக ஐகோர்ட்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு கட்டிடம் கட்டுவதற்கு தேவையான பொருட்கள் வந்துள்ளன. இந்த செயல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலை நிலவுவதால், கட்டிட பணியை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    ஜெபக்கூடம் கட்ட தடை கேட்டு ஏராளமானோர் திரண்டதால் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. பதட்டத்தை தணிக்க போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

    • அரங்கம் கட்ட அனுமதி வாங்கி, அதில் வழிபாட்டுக் கூடம் அமைப்பதாக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் பகுதியில் வழிபாட்டுத் தலம் அமைக்கக்கூடாது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி பகுதியில், பெரும்பான்மை மக்கள் வசித்து வரும் பகுதியில், சிலர் அரங்கம் கட்ட அனுமதி வாங்கி, அதில் வழிபாட்டுக் கூடம் அமைப்பதாக, அந்தப் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், இந்து முன்னணியினர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று அந்தப் பகுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடே ஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டு, பெரும்பா ன்மையான மக்கள் வசிக்கும் பகுதியில் வழிபாட்டுத் தலம் அமைக்கக்கூடாது. இதனால் மதமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால் மாவட்ட அளவில் போராட்டங்கள் நடைபெறும் என கூறியிருந்தார். இந்த நிலையில் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார், பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சுக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, துணை தலைவர் மருதாசலமூர்த்தி மற்றும் காளிவேலம்பட்டி பொதுமக்கள், கட்டிட உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வழிபாட்டு தலம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து கட்டட உரிமையாள ர்களிடம், அரங்கம் அமைப்பதாக கூறி கட்டட அனுமதி பெற்று விட்டு தற்போது கட்டுமான ப்பணி நடைபெற்று கொண்டிரு க்கும்போது, ஜெபக்கூடம் கட்டுவதற்கு அனுமதி கேட்பதை ஏற்க முடியாது. மாவட்ட கலெக்டரின் மறு உத்தரவு வரும் வரை கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். கட்டுமானப் பணிகளை தொடரக்கூடாது என தாசில்தார் கட்டட உரிமையாளருக்கு அறிவுறுத்தினார். இதனை ஏற்று கட்டுமான பணிகள் நடைபெறாது என அவர்கள் தெரிவித்தனர்.

    ×