search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நித்தியானந்தா"

    • கைலாசா நாடு பற்றிய பரபரப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை.
    • நாட்டுக்கென தனி பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றை அறிவித்தார்.

    புதுடெல்லி:

    சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாடு பற்றிய பரபரப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை.

    கடந்த 2019-ம் ஆண்டு நித்யானந்தா இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடு சென்ற நிலையில் அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    மேலும் அந்த நாட்டுக்கென தனி பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றை அறிவித்தார். அதைத்தொடர்ந்து கைலாசா சார்பில் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறி, இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலை தளங்களில் அவரது சிஷ்யைகள் பதிவிட்டனர்.

    அதோடு, கைலாசா நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்துள்ளதாக கூறியிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் கைலாசா பெண் பிரதிநிதிகள் பங்கேற்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கைலாசா சார்பில் பேசிய பெண் பிரதிநிதிகளின் பேச்சு நீக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை சார்பில் அறிவிக்கப்பட்டது. இல்லாத ஒரு நாட்டின் பெயரில் நித்யானந்தாவும், அவரது சிஷ்யைகளும் ஒரு பிம்பத்தை உருவாக்கி வருவதாக சமூக வலைதளங்களில் ஏராளமானோர் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்நிலையில் கைலாசா இருக்கும் இடத்தை வருகிற 21-ந்தேதி அறிவிக்க போவதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    அதில், கைலாசா திறக்கப்பட்டுள்ளது. வருகிற 21-ந்தேதி குருபூர்ணிமா நன்னாளில் கைலாசா இருக்கும் இடம் அறிவிக்கப்படும். உங்களை அன்போடு வரவேற்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

    மேலும் கைலாசா வாசியாக இப்போதே பதிவு செய்யுங்கள் என்று ஒரு ஆன்லைன் லிங்கும் குறிப்பிட்டுள்ளனர்.

    இதன் மூலம் கைலாசா எங்கே உள்ளது என்ற கேள்விக்கு 21-ந்தேதி விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நித்தியானந்தா உருவாக்கியதாக சொல்லப்படும் கைலாசா நாடு எங்கு இருக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை.
    • கைலாசா தொடர்பான சர்ச்சைகளை அறிந்தவுடன் சமீபத்தில் நேவார்க் நகரம் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

    நியூயார்க்:

    கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்த சாமியார் நித்தியானந்தா, இது இந்துக்களுக்கான நாடாக இருக்கும் என்று தெரிவித்தார். அத்துடன் தனது நாட்டிற்கென தனி கொடி, நாணயம் உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு உலகின் கவனத்தை ஈர்த்தார். சர்வதேச அளவில் இது பேசுபொருளாக ஆனபோதிலும், நித்தியானந்தா உருவாக்கியதாக சொல்லப்படும் கைலாசா நாடு எங்கு இருக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை.

    இந்த சூழ்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் நேவார்க் நகரம் கைலாசா நாட்டுடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இது கைலாசாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் என்றே நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் கூறி வந்தனர். ஆனால் கைலாசா தொடர்பான சர்ச்சைகளை அறிந்தவுடன் அந்த ஒப்பந்தத்தை நேவார்க் நகரம் சமீபத்தில் ரத்து செய்துவிட்டது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நித்தியானந்தாவின் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா, 30க்கும் மேற்பட்ட அமெரிக்க நகரங்களுடன் கலாச்சார பிணைப்பை ஏற்படுத்தும் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    போலி தேசமான கைலாசாவுடன் ரிச்மண்ட், விர்ஜீனியா முதல் டேடன், ஓஹியோ, பியுனா பார்க், புளோரிடா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நகரங்கள் கலாச்சார கூட்டாண்மை ஒப்பந்தம் செய்திருப்பதாக ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. போலி சாமியாரான நித்தியானந்தா ஏமாற்றிய நகரங்களை கண்டுபிடித்து வருகிறோம் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×