search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ம.க.ஸ்டாலின்"

    • வருகிற 20-ந்தேதி திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் பாபநாசம் தபால் நிலையம் முன்பு நடைபெறுகிறது.
    • போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின் அனைத்து வர்த்தகர்களையும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.

    பாபநாசம்:

    கும்பகோணம் புதிய மாவட்டம் அறிவிப்பை வருகின்ற சட்டசபை கூட்டத் தொடரிலேயாவது அறிவித்திடக்கோரி தமிழக முதல்வருக்கு நினைவூட்டும் வகையில் 1 லட்சம் தபால் அட்டைகள் அனுப்பும் கவன ஈர்ப்பு போராட்டம் வருகிற 20-ந்தேதி திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் பாபநாசம் தபால் நிலையம் முன்பு நடைபெறுகிறது.

    இப்போராட்டத்தில் வர்த்தகர்கள், விவசாயிகள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் அனைத்து கட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும் ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலின் பாபநாசத்தில் அனைத்து கூட்டமைப்பு நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வலியுறுத்தி அழைப்பிதழை வழங்கினார்.

    பாபநாசம் வணிகர் சங்க தலைவர் குமாரை போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அனைத்து வர்த்தகர்களையும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.

    பின்னர் பாபநாசம் நீதிமன்றத்திற்கு சென்று அங்குள்ள அனைத்து வழக்கறிஞர்களையும் நேரில் சந்தித்து போராட்டத்தில் கலந்து கொள்ள வலியுறுத்தினார் அப்போது போராட்டக் குழு நிர்வாகிகளும் உடன் கலந்து கொண்டனர்.

    ×