search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்.டி.ஓ. அலுவலகத்தில்"

    • கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    • நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் 2019-2021-ம் ஆண்டி ற்கான ஆண்டுத்தணிக்கையில் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    இந்த ஆய்வில் 2019-2023-ம் ஆண்டிற்கான தன்பதிவேடு, முன்கொணர் தன்பதிவேடு, வழக்கு பதிவேடு, நீண்டகால நிலுவையில் உள்ள அலுவலக கோப்புகள் உள்ளிட்ட முக்கிய அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடு களை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஒவ்வொரு இருக்கைக்கு உரிய கோப்புகள், முன்கொணர் பதிவேட்டின் படியம் மற்றும் நில அளவைத்துறையில் உள்ள அளவீட்டு நிலுவை இனங்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

    தொடர்ந்து, குடிமைப்பொருள், சமூக பாதுகாப்பு திட்டம், கோட்டகலால், நில அளவை பிரிவு, ஆதார் சேவை மையம், பதிவறை, கோட்ட புள்ளியியல் பிரிவுகளை தணிக்கை செய்தார்.

    மேலும், ஓராண்டிற்கு மேலாக நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நில சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. திவ்யபிரியதர்ஷினி, அலுவலக மேலாளர் (பொது) பூபதி, தாசில்தார்கள் கார்த்தி, ரவிசங்கர் (கலால்) (பொ), வட்ட வழங்கல் அலுவலர் கார்த்திகேயன் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×