search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "7 பேர் மீது"

    • காசிபாளையம் அருகே உள்ள அரசலமரம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
    • இது குறித்து கடத்தூர் போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடத்தூர் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கடத்தூர் அடுத்த காசிபாளையம் அருகே உள்ள அரசலமரம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

    போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த அய்யாசாமி (53), கிருஷ்ணன் (68), பெருமாள் (56), பரமேஸ்வரன் (50), நஞ்சப்பன்(62), முருகேசன் (50) ஆகியோர் என்பதும் இவர்கள் பணம் வைத்து சூதாடி கொண்டு இருப்பதும் தெரிய வந்தது.

    இது குறித்து கடத்தூர் போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து சீட்டுக்கட்டுகள், பணம் ரூ.7,050 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ×