என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்டல நிர்வாகிகள்"

    • மதுரை மண்டல நிர்வாகிகள் கலந்்தாய்வு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மதுரை

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல கலந்்தாய்வுக்கூட்டம் செல்லூர் கண்மாய்கரை ரோடு லூர்து அன்னை பேப்பர் ஸ்டோர் வளாகத்தில் நடந்தது.

    மண்டல தலைவர் டி.எஸ். மைக்கேல்ராஜ் தலைமை தாங்கி பேசினார். தங்கராஜ், சில்வர்சிவா, குட்டி என்ற அந்தோணிராஜ், ஸ்வீட்ராஜன், ஜெயகுமார், தேனப்பன், வக்கீல் கண்ணன், சூசை அந்தோணி முன்னிலை வகித்தனர்.

    ஆன்லைன் வர்த்த கத்துக்கு தடை விதிக்க வேண்டும் மற்றும் சுதேசி வணிகத்தை வலியுறுத்தும் வணிகர் தின சிறப்பு மாநாடு சென்னையில் நடத்துவது குறித்து ஆலோசனை பெறப்பட்டது.

    தீர்மானங்கள்

    வணிகர்களுக்கு பாதுகாப்பாக செயல்படும் ஒரே சங்கம் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மட்டுமே. ஆகையால் சங்கத்தின் மாநிலத் தலைவா் முத்துக்குமார் தலைமையில் நடைபெறும் 40-வது வணிகர் தின மாநாட்டை மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும். சென்னையில் நடைபெறும் 40-வது வணிகர் தின மாநாட்டுக்கு மதுரை மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதி நிர்வாகிகள் தலைமையில் வேன்களில் செல்வது என்றும், மதுரை மண்டலம் சார்பில் ஒரு பஸ்சில் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    ஆன்லைன் மூலம் ெபாருட்கள் வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆன்லைன் மூலம் நடைபெறும் வியாபாரம் ஏமாற்றப்படுகிறது என்பதால் மக்கள் நேரடியாக அருகே உள்ள கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிர்வாகிகள் சுருளி, ஆனந்த், அப்பாஸ், ராமர், கரன்சிங், பிச்சைப்பழம், தேனப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர், பல்வேறு அமைப்பு நிர்வாகிகளும் இதில் கலந்து பங்கேற்றனர்.

    ×