search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு-கர்நாடகா"

    • பந்திப்பூர் தேசிய பூங்காவில் யானைகள் அதிகம் உள்ளது.
    • யானையின் முன் நின்று இளைஞர் ஒருவர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    தமிழ்நாடு - கர்நாடகா இடையே பந்திப்பூர் தேசிய பூங்கா அமைந்துள்ளது. அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய அறிவுறுத்தப்படுவார்கள்.

    இந்நிலையில், பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானையின் முன் நின்று இளைஞர் ஒருவர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    இதனையடுத்து, அமைதியாக இருந்த யானையை துன்புறுத்திய நபருக்கு வனத்துறை ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது.

    • தென்மாநில ஆக்கி இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-கர்நாடகா அணிகள் தங்கம் வென்றது.
    • கடந்த 19-ந்தேதி வேலு மாணிக்கம் ஆக்கி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தென் மாநில அளவிலான ஆக்கி போட்டி கடந்த 19-ந்தேதி வேலு மாணிக்கம் ஆக்கி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

    இதில் ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த ஜூனியர் மகளிர், ஆடவர் அணிகள் கலந்து கொண்டன.

    மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கர்நாடக அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.

    ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, கர்நாடக அணியை ஜூட் முறையில் 5-3 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றது.

    இறுதி போட்டியை தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.வெற்றி பெற்ற அணிகளுக்கு ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு பொதுச்செயலர் செந்தில் ராஜ்குமார், பொருளாளர் ராஜராஜன், மாவட்ட ஆக்கி சங்க சீனியர் துணைத்தலைவர் செல்லத்துரை அப்துல்லா, ராணி லட்சுமி குமரன் சேதுபதி, ஆக்கி சங்க மாவட்ட துணைத்தலைவர் அரவிந்த்ராஜ், துணைத்த லைவர் சின்னதுரை அப்துல்லா, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் ஆகியோர் பரிசு வழங்கினர்.

    ×