search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய் தர்ணா"

    • கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன் மகனுடன் தாய் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
    • மனு அளித்து தீர்வு காண வேண்டும் என கூறி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மகனுடன் தாய் சாலையில் அமர்ந்து திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர் பண்ருட்டி திடீர் குப்பத்தை சேர்ந்த சக்தி (வயது 42). என்இபது தெரிய வந்தது இவரது பாட்டனாருக்கு சொந்தமான நிலம் அதே பகுதியில் இருந்து வந்தது . இதனை எனது தந்தை பராமரித்து வந்த நிலையில் அவர் இறந்த பிறகு அதே பகுதியை சேர்ந்த 5பேர் நிலத்தை அபகரித்து போலி பத்திரம் தயாரித்து அவர்கள் பெயரில் மாற்றிக்கொண்டு பறித்து கொண்டனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு நடவடிக்கை எடுக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என சக்தி தெரிவித்தனர். அப்போது அங்கு இருந்த போலீசார் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு காண வேண்டும் என கூறி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×