என் மலர்
நீங்கள் தேடியது "தி.மு.க.கொடி"
- கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
- நிகழ்ச்சியில் அமைச்சர் பெரிய கருப்பன் கலந்துகொண்டு கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட துணை செயலாளர்கள் ராஜதுரை, மனோகரன், புனிதா, நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக சிவகங்கை மாவட்ட செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான பெரிய கருப்பன் கலந்துகொண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.
தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் நகர துணைசெயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், இளைஞர் அணி சரவணன், திலீப்குமார், வர்த்தக அணி பத்மநாபன் மற்றும் அஜய்மகேஷ்குமார், வக்கீல்கள் காசிராஜன் ஜெயக்குமார் மற்றும் வெங்கடேஷ், வீரா வீரமணி, சிவா, கணேஷ், சிவாஜி, ஜான்சன், ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.