என் மலர்
நீங்கள் தேடியது "பறை"
- ஜடா படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் குமரன்.
- இவர் இயக்கிய பறை மியூசிக் ஆல்பம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது.
கதிர் நடிப்பில் வெளியான ஜடா படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் குமரன். 2019ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் இவர் இயக்கிய பறை மியூசில் ஆல்பம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்ட இந்த ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஷான் ரோல்டன் மற்றும் குமரனின் வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ரசிகர் ஒருவர் பறை ஆல்பம் பாடலுக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணிக்காக காத்திருக்கிறோம். அப்டேட் கொடுங்க என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், நாங்கள் இருவரும் இணைந்து வேலை பார்த்து கொண்டிருக்கிறோம். விரைவில் அறிவிக்கிறோம் என்று பதிலளித்துள்ளார். இவரின் இந்த பதிவால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- 2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
- புதுச்சேரியை சேர்ந்த தவில் இசை கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது.
2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, இந்தாண்டில் பத்ம ஸ்ரீ விருது பெறும் 12 விருதாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழகத்தை சேர்ந்த இரண்டு இசை கலைஞர்களுக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த பறை இசை கலைஞர் வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 50 ஆண்டுக்கும் மேலாக அனுபவம் கொண்ட புதுச்சேரியை சேர்ந்த தவில் இசை கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.
மேலும், தமிழகத்தை சேர்ந்த நல்லி குப்புசாமி செட்டிக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.