என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிரடி மாற்றம்"

    • ஈரோடு மாநகராட்சியில் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    • ஜானகி ரவீந்திரன் ஈரோடு மாநகராட்சி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    சூரம்பட்டி:

    ஈரோடு மாநகராட்சியில் அதிகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டு ள்ளனர்.

    அதன்படி ஈரோடு மாநகராட்சி கமிஷனராக இருந்த சிவகுமார் கோவை மாநகராட்சி துணை கமிஷன ராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    இவருக்கு பதில் தஞ்சை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக பணியாற்றிய ஜானகி ரவீந்திரன் பதவி உயர்வு பெற்று ஈரோடு மாநகராட்சி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    இவர் நாளை (வெள்ளிக்கிழமை) பதவி ஏற்கிறார். இதேபோல் ஈரோடு மாநகராட்சி மாநகர என்ஜினீயராக பணியாற்றிய மதுரம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

    இவருக்கு பதில் ஈரோடு மாநகராட்சி செயற்பொறி யாளராக பணியாற்றிய விஜய குமார் ஈரோடு மாநகராட்சி மாநகர என்ஜினீய ராக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்று கொண்டார்.

    ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டல உதவி செயற்பொறி யாளராக பணியாற்றிய சண்முக வடிவு ஈரோடு மாநகராட்சி செயற்பொறி யாளராக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்று கொண்டார்.

    ×