என் மலர்
நீங்கள் தேடியது "ஆன்லைன் பதிவு"
- ஒரு நாளைக்கு ஒரு கடிதம் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரித்து வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்களை ஆன்லைனில் பதிவு செய்து அனுப்ப மாநில மந்திரிகள், எம்.பி.க்கள், எம். எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்களுக்காக ஒரு சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இனிமேல் பரிந்துரை கடிதங்களை https://cmotid telangana, gov. in இல் பதிவு செய்வது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கேன் செய்யப்பட்ட கடிதத்தில் கையொப்பமிட்ட பிறகு அதை திருப்பதி தேவஸ்தான ஆன்லைனில் பதிவேற்றி அசல் கடிதத்தை பக்தர்களிடம் கொடுக்குமாறு முதல்வர் அலுவலக துணைத் தலைவர் பொதுப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதே உள்நுழைவு விவரங்களை தரிசன கவுண்டரிலும் பயன்படுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் தங்கள் ஒதுக்கீட்டை மீறி பரிந்துரை கடிதங்களை வழங்குவது. அவர்களுடன் சென்று பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவது போன்ற அனுபவங்களை தொடர்ந்து ஆன்லைன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொது பிரதிநிதிகள் திங்கள் முதல் வியாழன் வரையிலான வருகைகளுக்கு மட்டுமே பரிந்துரை கடிதங்களை வழங்க வேண்டும்.
ஒரு நாளைக்கு ஒரு கடிதம் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனம் கூடுதலாக தங்குமிட வசதியும் வழங்கப்படுகிறது.
புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தரிசனம்உண்டு. ரூ.300, தங்குமிட வசதி இல்லை.
பக்தர்கள் அசல் பரிந்துரை கடிதத்துடன் செல்ல வேண்டும். ஆதார் அட்டைகள் இல்லாத குழந்தைகள் இருந்தால் அவர்கள் பிறப்புச் சான்றிதழுடன் செல்ல வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று 66,327 தரிசனம் செய்தனர்.26,354 பேர் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ. 3.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- ராணுவத்தில் சேர ஆன்லைன் பதிவு தேதி நீட்டிக்கப்பட்டது.
- விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டை அல்லது 10-ம் வகுப்பு சான்றிதழை பயன்படுத்தி பதிவு செய்யலாம்.
ராமநாதபுரம்
திருச்சி மண்டல ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலர் தீபக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
இந்திய ராணுவம் ஜீனியர் கமிஷன் அதிகாரிகள்/பிற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறையில் மாற்றங்களை அறிவித்துள்ளது. முதல் கட்டத்தில் joinindianarmy.nic.in (இந்திய ராணுவத்தில் சேரவும்) இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைனில் விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களும் பொது நுழைவுத்தேர்வுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
2-ம் கட்டத்தில் பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் அந்தந்த ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகங்களால் தீர்மானிக்கப்பட்ட இடங்களில் ஆட்சேர்ப்பு பேரணிக்கு அழைக்கப்படுவார்கள். அங்கு அவர்கள் உடல்தகுதி சோதனைகள் மற்றும் உடல் அளவீட்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இறுதியாக 3-ம் கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பேரணி நடைபெறும் இடத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்திய ராணுவத்தில் சேர இணையதளத்தில் ஆன்லைன் பதிவு 20.3.2023 வரை இருந்த நிலையில் தற்பொழுது 31.3.2023 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. புதிவு செய்யும் செயல்முறை முந்தையதைப்போலவே உள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டை அல்லது 10-ம் வகுப்பு சான்றிதழை பயன்படுத்தி பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு திட்டத்திலும் ஒன்றியம் வாரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெறுகின்றனர்.
- தனிப்பட்ட துறைகளுக்கென இவ்வசதியில்லாததால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன.
உடுமலை:
சமூக நலத்துறையின் கீழ் 2 பெண் குழந்தைகளுக்கான திட்டம், முதிர் கன்னிகள் மற்றும் விதவை பெண் மறுவாழ்வு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு திட்டத்திலும் ஒன்றியம் வாரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெறுகின்றனர். ஒன்றிய அலுவலகங்களில், திட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய நிர்வாகத்தில் அனைத்து திட்ட அலுவலர்களும் பொதுவாக பயன்படுத்தவே கம்ப்யூட்டர் வசதியுள்ளது.
தனிப்பட்ட துறைகளுக்கென இவ்வசதியில்லாததால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. சமூக நலத்துறை சார்ந்த திட்டங்களுக்கு இ - சேவை மையங்களில் ஆன்லைன் வாயிலாக பயனாளிகள் பதிவு செய்கின்றனர். அவ்வாறு செய்த பின்பு பதிவு செய்வதற்கு வழங்கப்படும் ஒப்புகை சீட்டை ஒன்றியங்களில் உள்ள சமூக நலத்துறை அலுவலர்களிடம் வழங்க வேண்டும். இந்நடைமுறை பலருக்கும் தெரிவதில்லை. சேவை மையங்களிலும், பயனாளிகளுக்கு இதுகுறித்து விபரங்களை கூறுவதில்லை. இதனால் பலரும் ஒப்புகை சீட்டை சமூக நலத்துறை அலுவலர்களிடம் சமர்ப்பிக்காமல் வைத்து க்கொள்கி ன்றனர். இந்த அலட்சியத்தால் உதவித்தொகை பெற பதிவு செய்வது, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும் தெரிவதில்லை.
இறுதி நேரத்தில் கம்ப்யூட்டர் பதிவில் பயனாளிகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் சமயத்தில் மட்டுமே இந்த குளறுபடிகளை நலத்துறை பணியாளர்கள் கண்டறி கின்றனர். ஆன்லைன் பதிவுகளிலிருந்து பயனாளிகளின் தொலைபேசி எண்களை கண்டறிந்து பணியாளர்கள் அவர்களுக்கு அழைக்கின்றனர். அனைத்து நலத்திட்ட ங்களுமே ஆன்லைன் முறையில் பதிவு செய்யப்படுவதால் இத்துறையினருக்கு இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் அவசியமாகியுள்ளது. பயனாளிகளின் விபரங்களை அறியவும், விபரங்களை முழுமையாக பதிவு செய்யவும், சமூக நலத்துறை அலுவலர்களுக்கு ஆன்லைன் வசதி தேவை என பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.