என் மலர்
நீங்கள் தேடியது "தேர் திருவிழா கொடியேற்றும்"
- கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- கணபதி ஹோமம் செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ் பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 16-ந் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வரு கிறது. இதனைத்தொடர்ந்து கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வரும் ஏப்ரல் மாதம் 5-ந் தேதி குண்டம் விழாவும், அதனைத்தொடர்ந்து தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது.
இதனையடுத்து சாமி ஒவ்வொரு வாகனத்திலும் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதில் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் தினந்தோறும் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவில் வளாகத்தில் பெண் ஒருவர் மயங்கி நிலையில் உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து கோவிலில் வளாக ங்கள் தண்ணீரால் தூய்மை செய்யப்பட்டு பின்னர் கணபதி ஹோமம், புண்ணிய தானம் செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.