search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதம்"

    • வாழைப்பூ குழந்தைகளுக்கு எப்படி எளிமையான முறையில் செய்து கொடுக்கலாம்.
    • வேகவைத்த சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கிளறவும்.

    வாழைப்பூவில் பெருமளவில் மருத்துவ குணம் உள்ளது. ஆனால் இந்த வாழைப்பூவை குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது பெரும் சிக்கலாகவே உள்ளது. வாழைப்பூ குழந்தைகளுக்கு எப்படி எளிமையான முறையில் செய்து கொடுக்கலாம் என்பதை இப்போது பார்ப்போம்....

    தேவையான பொருட்கள்:

    வேகவைத்த சாதம் - தேவையான அளவு

    வாழைப்பூ - 1

    கடலைப்பருப்பு - 3 ஸ்பூன்

    உளுத்தம்பருப்பு - 3 ஸ்பூன்

    பூண்டு - 7 பல்

    வரமிளகாய் - 5

    கறிவேப்பிலை - தாளிக்க

    வெங்காயம் - 1

    மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    கடுகு - 1 ஸ்பூன்

    பெருங்காயத்தூள் - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    பொடி அரைக்க...

    • ஒரு வாணலியில் கடலைப்பருப்பு 2 ஸ்பூன், உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன், பூண்டு 7 பல், வரமிளகாய் 3 போன்வற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    • பின்னர் வறுத்த பொருட்களை நன்கு ஆறிய பின் ஒரு மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    செய்முறை:

    • வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

    • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றவும்.

    • எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொறியவிடவும்.

    • கடுகு பொறிந்ததும் கடலைப்பருப்பு 1 ஸ்பூன், உளுந்தம் பருப்பு 1 ஸ்பூன், வரமிளகாய் 2 ஆகியவற்றை சிறிது வதக்கவும்.

    • பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    • வெங்காயம் வதங்கியவுடன் பொடியாக நறுக்கி வைத்திருந்த வாழைப்பூவை போட்டு நன்கு வதக்கவும்.

    • இதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூ, உப்பு சேர்க்கவும்.

    • வாழைப்பூவில் உள்ள நீர் நன்கு வடிந்தவுடன் தயாரித்து வைத்துள்ள பொடியை போட்டு நன்கு கிளறவும்.

    • அதன் பின்னர் வேகவைத்த சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கிளறவும்.

    • இதோ சுவையான வாழைப்பூ சாதம் ரெடி.

    • கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் இருக்கும் நாய்குட்டிகளுக்கு தினம்தோறும் வீட்டிலிருந்து பால் சாதம் தயாரித்து எடுத்து வந்து அளித்து வருகிறார்.
    • இதனை கண்ட பலரும் இவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி கிழக்குக்காடு கணபதி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் ரவிகாந்த் (வயது 52). தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    விலங்குகள், பறவைகள் மீது அதீத பற்று கொண்ட இவர், தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து, வீட்டில் பானைகள், செயற்கை கூடுகள் அமைத்து, பல ஆண்டுகளாக சிட்டுக்குருவிகளுக்கு வாழிடம் அமைத்து கொடுத்து வருகிறார். கோடை காலங்களில் குருவிகளுக்கு, தண்ணீர் மற்றும் உணவு தானியங்கள் வைத்து வருகிறார்.

    வாழப்பாடி பகுதியில் ஏராளமாக சுற்றித்திரியும் நாய்க்குட்டிகளை, குறிப்பாக பெண் நாய்க்குட்டிகளை, வாழப்பாடி கிழக்குக்காடு மயானம் அருகே கொண்டு வந்து விட்டுச் செல்கின்றனர். இப்படி கைவிடப்பட்ட ஏராளமான நாய்க்குட்டிகள் இப்பகுதியிலேயே தங்கி உணவின்றி தவித்து வருகின்றன.

    இதனைக் கண்ட ரவிகாந்த் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் இருக்கும் நாய்குட்டிகளுக்கு தினம்தோறும் வீட்டிலிருந்து பால் சாதம் தயாரித்து எடுத்து வந்து அளித்து வருகிறார். இதனை கண்ட பலரும் இவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து இவரிடம் கேட்டதற்கு, 'தெரு நாய்கள் குட்டி போடும்போது ஆண் குட்டிகளை எடுத்துச் செல்லும் பொதுமக்கள், பெண் குட்டிகளை கொண்டு வந்து மயானத்தில் விட்டு சென்று விடுகின்றனர். இந்த குட்டிகள் உணவின்றி தவித்து வருகின்றன.

    இதனால், இந்த நாய்க்குட்டிகளுக்கு உணவளிக்க வேண்டும் என மனதில் தோன்றியது. 2 ஆண்டுகளாக தொடர்ந்து உணவளித்து வருகிறேன். இது எனக்கு மன நிறைவைத் தருகிறது' என்றார்.

    ×