search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலயங்கள்"

    • மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 14 கோபுரங்கள் உள்ளன.
    • வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோவிலில் நடைபெறுவது சிதம்பரத்தில் தான்

    திருவண்ணாமலை கோவில்: திருவண்ணாமலை சுவாமி எப்போதும் ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.


    மதுரை மீனாட்சியம்மன் கோவில்: வேறு எந்த கோவிலிலும் இல்லாத அளவுக்கு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 14 கோபுரங்கள் உள்ளன.

    திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில்: இந்த கோவில் கும்பகோணம் அருகே உள்ளது. இந்த கோவிலில் தயாரிக்கும் எந்த நைவேத்தியப் பண்டங்களிலும் உப்பு சேர்ப்பதில்லை.


    ராமநாத சுவாமி கோவில்: இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவில் ஒரு சிவன் கோவில் ஆகும். இங்கு பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கப்படுகிறது. மேலும் வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது இல்லை.

    சிதம்பரம் நடராஜர் கோவில்: சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் மூலவரே வீதிவலம் வருவம். மேலும் இந்த கோவிலின் அதிசயம் என்னவென்றால் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம். அதுபோல் சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோவிலில் நடைபெறுவது சிதம்பரத்தில் தான்.


    தக்கலை சிவன் கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கேரளபுரத்தில் சிவபெருமான் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலின் அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் ஒன்று இருக்கிறது. ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி சக்தி அதற்கு உண்டு. இந்த சிலை சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்டது.

    திருக்கோவிலூர் கோவில்: விழுப்புரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலில் தான் எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்படும். ஆனால் இங்கு மட்டும் தான் வலது கையில் சங்கு இருக்கும்.


    பத்ரிநாத்: இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். இங்கு மே மாதம் முதல் வாரம் நடை திறந்து நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள். கோவிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவர். அந்த தீபம் மீண்டும் கோவில் மீண்டும் திறக்கப்படும் வரை அதாவது, ஆறுமாதம் வரை எரிந்துகொண்டே இருக்கும்.

    சமயபுரம்: சமயபுரத்திலுள்ள ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் இருக்கும். அதுவும் மிகப் பெரிய அளவில் இருக்கும். இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை. இது சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.


    திருநீர்குகை: இந்த குகை தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிமலையில் உள்ளது. இந்த குகையில் விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும். இதனால் தான் இந்த குகைக்கு திருநீர்குகை என்று பெயர் வந்தது. மேலும் கதிர்காமம், மருதமலை, திருநீற்று மலை, கங்கை கரையில் உள்ள திருவருணை ஆகிய திருத்தலங்களிலும் திருநீறு தானாகவே விளையும்.

    ரத்னகிரி மலை: இந்த மலையில் உள்ள முருகனுக்கு பால் கொண்டு அபிஷேகம் செய்த சிறிது நேரத்திலேயே அது தயிராக மாறிவிடும்.

    சென்னிமலை முருகன்: இம்மலையில் உள்ள முருகனுக்கு தயிர் கொண்டு அபிஷேகம் செய்யும் போது அது புளிப்பதில்லை.


    வேலப்பர் கோவில்: தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள இந்த கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்தக் கோவிலின் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கும்.

    ஏகாம்பரநாதர் கோவில்: காஞ்சி அமைந்துள்ள இந்த கோவிலில் அம்மன் சந்நிதி இல்லை.

    காசியில் பல்லிகள் இருந்தாலும் அவைகள் ஒலிக்காது. மேலும் இந்நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறக்காது.

    குளித்தலை, மணப்பாறை வழியில் ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை உள்ளது. இம்மலையின் மேல் காகங்கள் பறக்கவே பறக்காது.

    நவக்கிரகப் பிரதிஷ்டை கோவில் வடகிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.

    ஆழ்வார்குறிச்சியில் உள்ள நடராஜர் சிலை ஒரே கல்லினால் கட்டப்பட்டது. அதை தட்டினால் வெண்கல ஓசை அதிலிருந்து வரும்.

    • சிலுவைப்பாதை வழிபாடு, சிறப்பு பிரார்த்தனை, கூட்டு திருப்பலியும் நடைபெற்றது.
    • தவக்காலத்தில் விரதம் இருந்த கிறிஸ்தவர்கள் தங்கள் விரதத்தை முடித்து விருந்துண்டு மகிழ்வார்கள்.

    திருப்பூர் :

    ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளான வெள்ளிக்கிழமையை புனித வெள்ளியாகவும், அவர் உயிர்தெழுந்த 3-ம் நாளான ஞாயிற்றுக்கிழமையை ஈஸ்டர் பெருவிழாவாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஈஸ்டர் திருநாளின் முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாகவும், அதைத்தொடர்ந்து அந்த வாரம் முழுவதும் புனித வாரமாகவும் அனுசரிக்கப்படுகிறது.

    புனித வெள்ளிக்கிழமைக்கு முன்பு வரும் வியாழக்கிழமை பெரிய வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் தேவாலயங்களில் ஆண்டவரின் கடைசி இரவு உணவு திருப்பலியும், பாதம் கழுவும் சடங்கு போன்றவையும் நடந்தது. நேற்று புனித வெள்ளி தினம் கடைபிடிக்கப்பட்டது. ஏசு சிலுவையை சுமந்து செல்லும்போதும், அந்த சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் (இறக்கும்) நேரத்திலும் 7 திருவசனங்களை அவர் கூறினார் என்று புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. அந்த வசனங்களை அடிப்படையாக வைத்து தேவாலயங்களில் பிரசங்கங்கள், ஆராதனைகள் நடந்தன.

    திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள புனித கத்தரீனம்மாள் தேவாலயத்தில் பங்கு தந்தை ஹைசிந்த் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சிலுவைப்பாதை வழிபாடு, சிறப்பு பிரார்த்தனை, கூட்டு திருப்பலியும் நடைபெற்றது. குமார் நகர் புனித சூசையப்பர் தேவாலயம், சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலயத்தில் ஆயர் ஆனந்த குமார் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

    இதுபோல் ஆசர்நகர் சி.எஸ்.ஐ. தூய லூக்கா தேவாலயம், சபாபதிபுரம் டி.இ.எல்.சி. அருள்நாதர் தேவாலயத்திலும் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள், பெந்தேகோஸ்தே திருச்சபைகளிலும், மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    ஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்த 3-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று நள்ளிரவு 12 மணிக்கு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடத்தப்படுகிறது. நாளை அதிகாலையும் தேவாலயங்களில் கூட்டு திருப்பலிகள், சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். தவக்காலத்தில் விரதம் இருந்த கிறிஸ்தவர்கள் தங்கள் விரதத்தை முடித்து விருந்துண்டு மகிழ்வார்கள். மேலும் நண்பர்களுக்கும் விருந்தளித்து ஈஸ்டர் பெருவிழாவை கொண்டாடுவார்கள்.

    • 40 நாட்கள் தவக்காலம் அனுசரிப்பர்.
    • கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனி மற்றும் திருப்பலியுடன் துவங்கியது.

    திருப்பூர் :

    ஏசு கிறிஸ்து, சிலுவையில் அறையுண்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கையை நினைவுபடுத்தும் வகையில் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பெருநாள் கொண்டாடு கின்றனர். இதையொட்டி 40 நாட்கள் தவக்காலம் அனுசரிப்பர்.கடந்த பிப்ரவரி 21-ந்தேதி சாம்பல் புதனுடன் தவக்காலம் துவங்கியது.தேவாலயங்களில் வெள்ளி தோறும் சிலுவைப்பாதை ஆராதனை நடத்தப்பட்டது.

    பக்தர்களை ஆன்மிக பாதையில் வழிநடத்தும் வகையில் கத்தோலிக்க, சி.எஸ்.ஐ.., உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களி லும், சிறப்பு நற்செய்தி கூட்டங்கள் நடத்தப்பட்டன.தவக்காலத்தின் புனித வாரம் கடந்த ஞாயிற்றுக்கி ழமை குருத்தோலை பவனி மற்றும் திருப்பலியுடன் துவங்கியது.

    நேற்று புனித வியாழன், அனுசரிக்கப்பட்டது. ஏசு கிறிஸ்து, சிலுவைப்பாடு களை அனுபவிக்க துவங்கும் முன், தம் சீடர்களின் கால்களை கழுவி அவர்களுடன் உணவு அருந்திய நிகழ்வு நினைவு கூறப்பட்டது. இன்று ஏசுவின் சிலுவைப்பா டுகளை நினைவு கூறும் சிலுவைப்பாதை ஆராதனை திருப்பூர் ஆலயங்களில் நடத்தப்பட்டது. வருகிற 9-ந்தேதி ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

    • தவக்காலத்தின் புனித வாரம் இன்று தொடங்கியது.
    • 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலம் அனுசரிப்பர்.

    திருப்பூர் :

    கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பெருவிழாவை யொட்டி கடை பிடிக்கப்படும் தவக்காலத்தின் புனித வாரம் இன்று தொடங்கியது. ஏசு கிறிஸ்து சிலுவை யில் அறையுண்டு மூன்றாம் நாள் உயிர்த் தெழுந்தார் என்ற நம்பிக்கை தான் கிறிஸ்தவம். இதை நினைவு கூறும் வகையில் தான் ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலம் அனுசரிப்பர்.கடந்த பிப்ரவரி 21-ந்தேதி சாம்பல் புதனுடன், தவ க்காலம் துவங்கியது. தினமும் தேவலாயங்களில் ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் தியானிக்கப்பட்டு வருகின்றன.வெள்ளி தோறும் சிலுவைப்பாதை ஆராதனை நடத்தப் படுகிறது.

    பக்தர்களை ஆன்மிக பாதையில் வழி நடத்தும் வகையில் கத்தோலிக்க, சி.எஸ்.ஐ.., உள்ளிட்ட அனைத்து தேவாலயங்க ளிலும், சிறப்பு நற் செய்தி கூட்டங்கள் நடத் தப்பட்டன. இந்த தவக்கா லத்தின் புனித வாரம் இன்று தொடங்கியது. இதையொட்டி தேவாலய ங்களில் குருத்தோ லை பவனி நடத்தப்பட்டன. திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஆலயங்க ளில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக, வருகிற 6-ந் தேதி புனித வியாழன், 7ந் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப் படுகிறது. 9-ந் தேதி ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப் படுகிறது.

    ×