என் மலர்
நீங்கள் தேடியது "பங்குனி உத்திர பெருவிழா"
- 5-ந்தேதி நடக்கிறது
- அன்னதானம் வழங்க ஏற்பாடு
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் நற்குன்று குமரகிரி ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் வரும் 5-ந்தேதி புதன்கிழமை காலை 9.00 மணி அளவில் மூலவர் ஸ்ரீ பாலமுருகனுக்கு உற்சவர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் அபிஷேகம் அலங்காரமும் தொடர்ந்து தம்பதிகள் சங்கல்பமும் திருக்கல்யாண வைபோகம் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து மதியம் 12:30 மணி அளவில் அன்னதானமும் மாலை 6.00 மணி அளவில் உற்சவர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் கல்யாண கோலத்தில் சுவாமி திருவீதி உலாவும் வானவேடிக்கையுடன் நடைபெறும்.