என் மலர்
நீங்கள் தேடியது "தீர்த்த குடம் எடுத்து"
- பெண்கள் தீர்த்த குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்தனர்.
- தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி கும்மியடித்து வழிபாடு மேற்கொண்டனர்.
ஈரோடு:
ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்களாக சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களில் இந்த ஆண்டுக்கான குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டு தலுடன் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து கடந்த 25-ந் தேதி இரவு 3 கோவில்களிலும் கம்பங்கள் நடப்பட்டது. இந்த கம்பங்க ளுக்கு தினந்தோறும் பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வருகிறார்கள்.
இந்த நிலை யில் ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கம்பங்களுக்கு புனித நீர் ஊற்றுவதற்காக நீண்ட வரிசையில் நின்று புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு சென்றனர்.
இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
வெகு விமர்சையாக நடைபெற்று வரும் கோவில் திரு விழாவையொட்டி கிருஷ்ணம்பாளையம், ஜீவா நகர் பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி முளைப்பாரி எடுத்து வந்து, பக்தி பரவசத்துடன் குலவை சத்தமிட்டு கும்மியடித்து நடனமாடி சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து கிருஷ்ணம்பாளையம், கருங்கல் பாளையம், காவேரி சாலை, ஆர்.கே.வி.சாலை, மணிக்கூண்டு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப் பாரி தலையில் சுமந்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த ஊர்வலத்தில் தமிழர்க ளின் பாரம்பரிய கலைகளான தீப்பந்தாட்டம், சிலம்பம் உள்ளிட்ட கலைகளுடன் நாட்டுப்புறக் கலைஞர்கள் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்திய தால் பார்ப்போ ரை மெய்சிலிர்க்க வைத்தது.
இதேபோல் ஈரோடு மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து பெரிய மாரியம்மனுக்கு பெண்கள் விடிய, விடிய தீர்த்த குடம் எடுத்துக் கொண்டு மேள தாளங்களுடன் ஊர்வலமாக வந்தனர்.
இதைத்தொடர்ந்து வரும் 4-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு வாய்க்கால் மாரி யம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 8 மணிக்கு மாவிளக்கு, கரகம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து 5-ந் தேதி காலை 9.30 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடைபெறும். 6-ந் தேதி இரவு 8 மணிக்கு பெரிய மாரியம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடை பெறுகிறது.
தொடர்ந்து 7-ந் தேதி மாலை 4 மணிக்கு தேர் நிலை சேரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இரவு 8 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் திருவீதி உலா, 9.30 மணிக்கு சின்ன மாரியம்மன் திருவீதி உலா நடைபெறவுள்ளது.
இதையடுத்து 8-ந் தேதி மாலை 3 மணிக்கு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும்.
இதில் பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோவில்களை சேர்ந்த பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்க ளின் கம்பங்கள் எடுத்து வரப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் விடப்படும். அன்று உள்ளூர் விடுமுறையும் அளி க்கப்படுகிறது.
அன்றைய தினம் பொதுமக்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் தண்ணீர் ஊற்றி மகிழ்ச்சியை வெளி ப்படுத்துவார்கள். எங்கு பார்த்தாலும் மஞ்சளாக காட்சி யளிக்கும்.
தொடர்ந்து இறுதி நிகழ்ச்சியாக 9-ந் தேதி காலை 10.30 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது.