search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடிவேரியில்"

    • 100 டிகிரிக்கு மேல் தொடர்ந்து வெயில் பதிவாகி வருகிறது.
    • கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    கோபி, 

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஈரோடு மாவட்டம் மட்டு மின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    மேலும் விடுமுறை நாட்களில் பொதுமக்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படும். இதனால் கொடிவேரி அணை பகுதியில் எப்போதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 100 டிகிரிக்கு மேல் தொடர்ந்து வெயில் பதிவாகி வருகிறது. கடந்த வாரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியாக காணப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி சுட்டெரித்து வருகிறது. மேலும் பள்ளி விடுமுறை நாட்கள் என்ப தால் சுற்றுலா தலங்கள் மற்றும் நீர் நிலைகளில் பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள்.

    இதே போல் கொடிவேரி தடுப்ப ணையிலும் தொடர்ந்து மக்கள் குடும்பத்துடன் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களும் கொடிவேரிக்கு சுற்றுலா பயணிகள் வழக்கத்தை விட அதிகளவில் வந்திருந்தனர்.

    காலை நேரத்தில் பொது மக்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டாலும் நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. கொடிவேரிக்கு குடும்பம், குடும்பமாக வந்த சுற்றுலா பயணிகள் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் வெயிலின் தாக்கத்தால் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என பலர் நீண்ட நேரம் கொட்டும் தண்ணீரில் குளித்த மகிழ்ந்தனர்.

    இதனால் கொடிவேரி தடுப்பணை பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாக காணப்பட்டது. பொதுமக்கள் கார், வேன், இரு சக்கர வாகனங்களில் அதிகளவில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை போலீசார் சரி செய்து அனுப்பி வைத்தனர்.

    நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்து 500 பேர் கொடிவேரி அணைக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர். இதன் மூலம் ரூ.62 ஆயிரத்து 500 வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கொடிவேரியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி வருகிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்ப த்துடன் வந்து செல்கிறார்கள்.

    மேலும் முக்கிய தினங்கள் மற்றும் விடுமுறை நாட்க ளில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 105 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கொடிவேரி உள்பட பல்வேறு நீர்நிலைகளுக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தொடர் விடுமுறையை யொட்டி நேற்று மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    இதே போல் கொடிவேரி தடுப்பணைக்கு பொது மக்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். காலையில் நேரத்திலேயே மக்கள் கூட்டம் கூட்டமாக அதிகளவில் வர தொடங்கினர்.

    ஆனால் நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் கொடிவேரி தடுப்பணை பகுதியில் மக்கள் செல்ல முடியாத அளவுக்கு வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணபட்டது.

    இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் கொடிவேரி தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் கொடிவேரியில் எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்பட்டது.

    இதையொட்டி கொடிவேரி பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் தடுப்பணையில் குளிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் குளிக்க வேண்டும் என்று எச்சரித்து கண்காணித்தனர்.

    குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை தடுப்பணை யின் வெளிபகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் அங்கு விற்பணை செய்யப்படும் மீன் வகைகளையும் ருசித்து சாப்பிட்டு சென்றனர்.

    இதை தொடர்ந்து இன்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இதனால் கொடிவேரி பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • மாவட்டத்தில் 100 டிகிரிக்கும் மேல் வெயிலின் அளவு பதிவாகி வருகிறது.
    • கொடிவேரி தடுப்பணைக்கும் கடந்த 2 வாரமாக ெபாதுமக்கள் வருகை அதிரித்து வருகிறது.

    கோபி,

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது. இந்த அணையில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் மாவட்டத்தில் 100 டிகிரிக்கும் மேல் வெயிலின் அளவு பதிவாகி வருகிறது இதனால் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிக ரித்த வண்ணம் இருந்து வருகிறது.

    இதையொட்டி வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள பொதுமக்கள் நீர்நிலைகளை தேடி சென்று குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    இதே போல் கொடிவேரி தடுப்பணைக்கும் கடந்த 2 வாரமாக பொதுமக்கள் வருகை அதிரித்து வருகிறது. அவர்கள் குடும்பத்துடன் வந்து வெயிலின் சூட்டை தணிப்பதற்காக அணையில் குளித்து சென்ற வண்ணம் உளள்னர்.

    இந்த நிலையில் விடுமுறை தினம் என்பதால் நேற்று கொடிவேரி அணை யில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களான கோவை, திருப்பூர், கரூர் மாவட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்திருந்தனர்.

    ஆண்கள், பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமிகள் என குடும்பத்துடன் வந்த மக்கள் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பலர் வெயிலினால் தண்ணீரில் இருந்து வெளியே வராமல் அப்படியே நீண்ட நேரம் குளித்து கொண்டே இருந்தனர்.

    மேலும் நேரம் செல்ல செல்ல ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டே இருந்தனர். அவர்கள் குளித்து விட்டு தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகளையும், அங்கு விற்பனை செய்ய ப்படும் மீன் வகைகளையும் ருசித்து சாப்பிட்டனர்.

    இதை யொட்டி நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள்கொடிவேரிக்கு வந்திருந்தனர்.

    ×