search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நட்டா"

    • பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்வது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயலாகும்
    • வந்தேபாரத் ரயில், புல்லட் ரயில் இவை எதுவுமே சாதாரண மக்களுக்கு பயன்படுகிற வகையில் அமைவதில்லை

    பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.

    இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    "2014, 2019 ஆகிய தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பா.ஜ.க. 2024 தேர்தலுக்கு முதல்கட்ட தேர்தல் தொடங்கி அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு அவற்றை பார்த்து இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

    பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை சமூகநீதி, மதநல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு அம்சங்கள் உள்ளன.

    பல்வேறு மதம், மொழி, ஜாதி, இனங்களை கொண்ட பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்வது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயலாகும்.

    தற்போது நடைபெறுகின்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 இல் ஆரம்பித்து ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்படுகிற நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தலை எப்படி நடத்த முடியும் என்பதை பிரதமர் மோடி தான் விளக்க வேண்டும்.

    புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களை அழைக்காமல் புறக்கணித்த பா.ஜ.க.வினர் 2025 ஆம் ஆண்டை பழங்குடியினர் ஆண்டாக கொண்டாடுவோம் என்பது அப்பட்டமான இரட்டை வேடமாகும்.

    ஏற்கனவே ஆயுஷ்மான் திட்டத்தில் ஊழல் புரையோடிப் போயிருக்கிற நேரத்தில் மீண்டும் அத்திட்டம் குறித்து தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும் என்று தேர்தல் அறிக்கை கூறுகிறது. நிதி ஒதுக்குவதில் தமிழ் மொழியை விட 18 மடங்கு அதிகமாக சமஸ்கிருத மொழிக்கு நிதி ஒதுக்கி பாரபட்சம் காட்டுகிற பா.ஜ.க., தமிழ் மொழி வளர்ச்சி பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. இதன்மூலம் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.

    தேர்தல் நன்கொடை பத்திரம் மூலமாக ரூபாய் 8,000 கோடி கார்ப்பரேட்டுகளிடம் நிதியை பெற்று குவித்த பா.ஜ.க., ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது மிகுந்த கேலிக்குரியதாக இருக்கிறது.

    வந்தேபாரத் ரயில், புல்லட் ரயில் இவை எதுவுமே சாதாரண மக்களுக்கு பயன்படுகிற வகையில் அமைவதில்லை. தமிழகத்தில் மெட்ரோ ரயிலை புறக்கணித்த பா.ஜ.க.வை எவரும் மறந்திட இயலாது.

    மோடியின் உத்திரவாதம் நம்பகத் தன்மையை இழந்துள்ளது. ஏற்கனவே 2014 இல் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக கூட்டப்படும், கருப்பு பணத்தை ஒழித்து அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற உத்திரவாதத்தை நிறைவேற்றாத மோடியின் உத்திரவாதத்தை மக்கள் எவரும் நம்ப மாட்டார்கள்.

    தேர்தல் அறிக்கையை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை ஜாதிவாரியாக கணக்கெடுத்து இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்காத பா.ஜ.க., டாக்டர் அம்பேத்கர் பெயரை உச்சரிக்க தகுதியில்லை.

    எனவே, மக்களின் நம்பகத்தன்மையை இழந்த பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாகவே இருக்கிறது. இதில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துகள் எதையும் பா.ஜ.க. கூறவில்லை. இந்த தேர்தல் அறிக்கையை நாட்டு மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள்.

    கடந்த தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நிகழ்த்திய ஜூம்லா நாடகத்தை மீண்டும் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு அரங்கேற்றியிருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்
    • பாஜகவின் தேர்தல் அறிக்கையில் வேலையின்மை என்ற வார்த்தையே இல்லை - ராகுல்காந்தி

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

    அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை பாரதிய ஜனதா நியமித்தது.

    இந்நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட பா.ஜ.க. மேலிட தலைவர்கள் முடிவு செய்தனர். இதற்கான விழா டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரும் இதில் பங்கேற்றனர்.

    முதலில் பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா தேர்தல் அறிக்கை தொடர்பாக விளக்கி பேசினார். அப்போது அவர் சமுதாய மேம்பாட்டுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பா.ஜ.க. தன்னை அர்ப்பணித்து இருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டது.

    இதையடுத்து பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

    பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "பாஜகவின் தேர்தல் அறிக்கை மற்றும் நரேந்திர மோடியின் உரையில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகிய இரண்டு வார்த்தைகள் இல்லை. மக்களின் வாழ்க்கை தொடர்பான மிக முக்கியமான பிரச்சனைகளை கூட விவாதிக்க பாஜக விரும்பவில்லை.

    இந்தியா கூட்டணியின் நோக்கம் மிகவும் தெளிவானது - அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மற்றும் படித்த ஒவ்வொரு இளைஞருக்கும் நிரந்தர வேலை உறுதி.

    இந்த முறை மோடியின் மாய வலையில் இளைஞர்கள் சிக்கப் போவதில்லை, இனி அவர்கள் காங்கிரசின் கரங்களை வலுப்படுத்தி நாட்டில் வேலைவாய்ப்பு புரட்சியை ஏற்படுத்துவர்" என்று பதிவிட்டுள்ளார்.

    • நாடு முழுவதும் அனைத்து துறை மக்களிடமும் பா.ஜ.க. சார்பில் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் முறை விரைவில் அமல்படுத்தப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

    அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை பாரதிய ஜனதா நியமித்தது.

    பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும், இணை ஒருங்கிணைப்பாளராக பியூஸ்கோயலும் பொறுப்பேற்றனர். மேலும் 24 உறுப்பினர்களும் இந்த குழுவில் இடம் பெற்றனர். 27 பேர் கொண்ட அந்த குழு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை தயாரித்தது.

    நாடு முழுவதும் அனைத்து துறை மக்களிடமும் பா.ஜ.க. சார்பில் கருத்துக்கள் கேட்கப்பட்டன. சுமார் 4 லட்சம் பேர் தங்களது கருத்துக்களை பரிந்துரையாக அளித்து இருந்தனர். அவற்றை எல்லாம் ஆய்வு செய்து பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது.

    பல்வேறு கட்ட ஆய்வுக்கு பிறகு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட பா.ஜ.க. மேலிட தலைவர்கள் முடிவு செய்தனர். இதற்கான விழா டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரும் இதில் பங்கேற்றனர்.

    முதலில் பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா தேர்தல் அறிக்கை தொடர்பாக விளக்கி பேசினார். அப்போது அவர் சமுதாய மேம்பாட்டுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பா.ஜ.க. தன்னை அர்ப்பணித்து இருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டது.

    இதையடுத்து பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளி யிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * ஒரே நாடு ஒரே தேர்தல் முறை விரைவில் அமல்படுத்தப்படும்.

    * நாடு முழுவதும் பொதுவான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.


    * மேலும் 5 ஆண்டுகளுக்கு ரேஷன் கடைகளில் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

    * 2025-ம் ஆண்டு பழங்குடியின மக்களின் பெருமைமிகு ஆண்டாக கடைபிடிக்கப்படும்.

    * 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும்.

    * கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

    * வேலை வாய்ப்பு முதலீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

    * வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முத்ரா கடன் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்.

    * ஏழைகளுக்கு ஊட்டச் சத்து கிடைப்பது உறுதிப்படுத்தப்படும்.

    * நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வந்து அமல்படுத்தப்படும்.

    * ஏழைகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் சிலிண்டர் கொடுக்கும் திட்டம் மேலும் நீட்டிக்கப்படும்.

    * கிராம மக்களின் நலனுக்காக குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு வினியோகம் செய்யும் திட்டம் தீவிரப்படுத்தப்படும்.

    * பெண்கள், இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    * கிராமத்து பெண்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு ஒரு ரூபாயில் ஒரு நாப்கின் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும்.

    * திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும்.

    * பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய பொருளாதார கொள்கை திட்டம் வகுக்கப்படும்.

    * உலகின் சக்தி மிக்க பொருளாதார நாடுகளில் 3-வது நாடு என்ற மிகப்பெரிய பொருளாதார அந்தஸ்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    * பெண்களுக்கு கருப்பை புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம் வகுக்கப்படும்.

    * சாலையோரம் வசிப்பவர்களுக்கு மிகவும் குறைந்த வாடகையில் தங்குவதற்கு அரசே கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கும்.

    * மக்கள் மருந்தகங்களில் மருந்து விலை 80 சதவீத தள்ளுபடி விலையில் வழங்கப்படும்.

    * புல்லட் ரெயில் திட்டம் நாடு முழுவதும் கொண்டு வரப்படும்.

    * நாடு முழுவதும் விமான நிலையங்கள், ரெயில் நிலையங்களில் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.

    * ஸ்டாட்அப் நிறுவனங்களை மேலும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * உலகின் தொன்மையான மொழியான தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் தனி திட்டம் வகுக்கப்படும்.

    * தமிழுக்கு சேவை செய்யும் வகையில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் உருவாக்கப்படும்.

    இவ்வாறு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • அனைவரிடமும் காணொலி காட்சி மூலம் நட்டா உரையாற்றினார்.
    • தேர்தல் அட்டவணை வெளியானதும் ஒவ்வொரு எம்.பி.யும் வாக்காளர்களை தேடி செல்ல வேண்டும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக தொடங்கி இருக்கும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தூக்கம் பார்க்காமல் இரவு-பகலாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

    நேற்று முன்தினம் சுமார் 5 மணி நேர ஆலோசனையில் பிரதமர் மோடி, உள் துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா உள்பட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு உள்பட முக்கிய முடிவுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன.

    இதைத் தொடர்ந்து நேற்று நட்டா அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரையும் ஒன்று திரட்டி அவர் ஆலோசனை மேற்கொண்டார். பாரதிய ஜனதா கட்சியில் பாராளுமன்ற இரு அவைகளிலும் மொத்தம் 378 எம்.பி.க்கள் இருக்கிறார்கள்.

    அவர்கள் அனைவரிடமும் காணொலி காட்சி மூலம் நட்டா உரையாற்றினார். பாராளுமன்ற தேர்தல் பணிகளை தினமும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    அது மட்டுமின்றி பாரதிய ஜனதா கட்சியின் 378 எம்.பி.க்களும் அமைப்பு ரீதியி லான தேர்தல் பணிகளில் திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். 378 எம்.பி.க்களின் சமூக வலைதளங்களை கையாள்பவர்களையும் நட்டா இந்த கூட்டத்தில் அழைத்து பேசினார்.

    நமோ ஆப் மூலம் முக்கிய தகவல்கள் உங்களுக்கு வந்து சேரும் அவற்றை மக்களிடம் தவறாமல் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நட்டா அறிவுரை வழங்கினார்.

    தேர்தல் அட்டவணை வெளியானதும் ஒவ்வொரு எம்.பி.யும் வாக்காளர்களை தேடி செல்ல வேண்டும் என்றும் நட்டா கேட்டுக் கொண்டார். அவர் நேற்று 3 கட்டங்களாக பா.ஜ.க. எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    முதல் கட்டத்தில் 126 எம்.பி.க்களுடனும் 2-வது கட்டத்தில் 132 எம்.பி.க்களுடனும் ஆலோசித்தார். மீண்டும் அடுத்த வாரமும் இத்தகைய ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பி.எல். சந்தோஷ் தேர்தலை சந்திப்பதற்கான வழிகாட்டு நெறி முறைகளை வகுத்து கொடுத்து உள்ளார்.
    • பல்வேறு அணிகளின் தலைவர்கள் உள்பட 256 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலை சந்திப்பது தொடர்பாக பா.ஜனதா தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. பா.ஜனதா கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்று இன்னும் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

    அதே நேரம் பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுடன் திரைமறைவில் தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

    கூட்டணி பேச்சு ஒருபுறம் நடந்தாலும் பா.ஜனதா தனித்து போட்டியிடும் சூழ்நிலை வந்தாலும் அதையும் சந்திக்கும் வகையில் கட்சியை தயார்படுத்தி வருகிறார்கள்.

    பா.ஜனதா தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் சமீபத்தில் கோவையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி, எத்தனை தொகுதிகளில் போட்டி என்பதையெல்லாம் கடந்து பா.ஜனதா 15 சதவீதத்துக்கும் குறையாமல் வாக்குகளை பெற வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் களத்தில் பணியாற்ற வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார்.

    ஏற்கனவே பி.எல். சந்தோஷ் தேர்தலை சந்திப்பதற்கான வழிகாட்டு நெறி முறைகளை வகுத்து கொடுத்து உள்ளார்.


    அதன்படி ஒவ்வொரு சட்டமன்ற அளவிலான நிர்வாக குழுக்களும், பாராளுமன்றத் தேர்தல் பணிக்குழு, முழுமையான பூத் கமிட்டி அமைத்தல், பக்க பிரமுகர்களை நியமித்தல், ஒவ்வொரு பூத்திலும் 10 முக்கிய பிரமுகர்களை இணைப்பது பஞ்சாயத்து அளவில் போட்டியிட்டவர்கள், பிரபலங்கள், சமூக, ஆன்மீக முக்கியஸ்தர்களை கட்சியில் இணைத்தல், மத்திய அரசு திட்ட பயனாளிகளுடன் தொடர்பை ஏற்படுத்துதல், பூத் அளவில் வாட்ஸ் அப் குழுக்களை வலிமைபடுத்துதல், குறிப்பிட்ட குழுவினரை மனதில் கொண்டு அவர்களுக்காக பிரசார யுக்திகளை வகுப்பது, அரங்க கூட்டங்கள் நடத்துவது, வாக்காளர்களின் மனதை கவரும் வகையில் விளம்பரங்களை அனைத்து ஊடகங்கள், டிஜிட்டல் மூலம் வெளியிட வேண்டும்.

    கட்சியின் பல்வேறு நிலைகளிலும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல், கடை நிலையில் இருக்கும் பூத்களின் தரத்தை உயர்த்த வேண்டும்.

    ஒவ்வொரு பூத்திலும் கடந்த தேர்தல்களைவிட 10 சதவீத வாக்குகளை அதிகரித்தல், சாதி, தொழில் வயது வாரியான மற்றும் நடுநிலை வாக்காளர்களை தொடர்ந்து சந்திப்பது, எதிர்ப்புகளை திறம்பட சமாளிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை வகுத்து கொடுத்திருந்தார்.

    இந்த நிலையில் கட்சியின் அனைத்து நிலைகளையும் சேர்ந்த கட்சி நிர்வாகிகளை நேரில் அழைத்து இதுவரை நடந்த பணிகள் பற்றி மதிப்பிடவும், தொகுதியின் நிலவரங்கள் பற்றி நேரில் கேட்கவும் டெல்லி தலைமை முடிவு செய்துள்ளது.


    இதற்காக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மற்றும் துணைத் தலைவர்கள், செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், பல்வேறு அணிகளின் தலைவர்கள் உள்பட 256 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    டெல்லியில் வருகிற 17 மற்றும் 18 ஆகிய 2 நாட்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் பங்கேற்று நிலவரங்களை கேட்கிறார்கள். இதுவரை செய்து முடித்துள்ள பணிகள் தொடர்பாக தொகுதி வாரியாக கேட்டறிவார்கள்.

    அதை தொடர்ந்து ஒவ்வொரு தொகுதியின் நிலவரங்கள், வெற்றி வாய்ப்பு பற்றிய நிலவரங்களை கேட்டறிகிறார்.

    பின்னர் அவற்றின் அடிப்படையில் நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாக விளக்கம் அளிப்பார்கள் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • மேலிடத்தின் அனுமதியுடன் தான் அண்ணாமலை இவ்வாறு செயல்படுவதாக அ.தி.மு.க. தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
    • அண்ணாமலை தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். ஒரு சில சீட்டுகளை கெஞ்சி கேட்கும் நிலையில் இருக்க கூடாது.

    சென்னை:

    பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்று இருந்த அ.தி.மு.க. விலகியது அந்த கூட்டணிக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது.

    பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க.வை விமர்சித்ததும் அண்ணா பற்றி கூறிய கருத்தும் அ.தி.மு.க. தலைமைக்கு பிடிக்கவில்லை. இதுவே கூட்டணி முறிவுக்கான காரணம்.

    அண்ணாமலையின் செயல்பாட்டில் தங்களுக்கு திருப்தியில்லை என்று அ.தி.மு.க. தலைவர்கள் நேரிலேயே டெல்லி தலைவர்களிடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. எனவே மேலிடத்தின் அனுமதியுடன் தான் அண்ணாமலை இவ்வாறு செயல்படுவதாக அ.தி.மு.க. தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். இதையடுத்து கூட்டணியில் இருந்து விலகினார்கள். இனிமேல் பா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்துவிட்டனர்.

    ஆனால் அண்ணாமலை தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். ஒரு சில சீட்டுகளை கெஞ்சி கேட்கும் நிலையில் இருக்க கூடாது. இந்த தேர்தலில் போடும் அடித்தளம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு கைகொடுக்கும் என்று கருதுகிறார்.

    அண்ணாமலையின் இந்த முடிவுக்கு கட்சிக்குள் ஆதரவும் இருக்கிறது. அதேநேரம் பலமான கூட்டணி அமைத்தால் தான் சில தொகுதிகளில் ஜெயிக்க முடியும் என்று மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள்.

    3-வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்து வரும் டெல்லி தலைவர்கள் அண்ணாமலையின் அக்னி பரீட்சைக்கு சம்மதிப்பார்களா? அல்லது கூட்டணிக்கான முயற்சியை முன்னெடுக்க வலியுறுத்துவார்களா? என்று தெரியவில்லை.

    இந்நிலையில் நாளை (1-ந் தேதி) அண்ணாமலை டெல்லி செல்கிறார். அங்கு மத்திய மந்திரி அமித்ஷா, கட்சி தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது கூட்டணி முறிவுக்கான காரணங்களை விளக்குவார் என்று கூறப்படுகிறது.

    அடுத்த கட்டமாக தமிழகத்தில் கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அமித்ஷா ஆலோசனை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வருகிற 3-ந் தேதி (செவ்வாய்) மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் அமைந்தகரை அய்யாவு மகாலில் நடக்கிறது. அன்று மாலையில் கட்சியின் மையக்குழு கூட்டமும் நடக்கிறது.

    டெல்லியின் முடிவுகளை கட்சி நிர்வாகிகளிடம் அண்ணாமலை விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மத்திய மந்திரி சபையில் மாற்றம் செய்யப்பட்டால் அதில் தனக்கு மத்திய மந்திரி பதவி தருமாறு தம்பிதுரை கேட்டிருக்க கூட வாய்ப்பு உள்ளது.
    • தம்பிதுரை எம்.பி. டெல்லியில் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசியது அரசியலில் முக்கியத்துவம் பெற்று உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ள சூழலில், டெல்லியில் நேற்று முன் தினம் உள்துறை மந்திரி அமித்ஷாவை அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை சந்தித்து பேசி உள்ளார்.

    அது மட்டுமின்றி பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டாவையும் சந்தித்து பேசி இருக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கட்சி கூட்டணி வைக்கும் என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறி இருந்த நிலையில் இதை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் உறுதிபடுத்தி இருந்தார்.

    இந்நிலையில் தம்பிதுரை எம்.பி. டெல்லியில் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசியது அரசியலில் முக்கியத்துவம் பெற்று உள்ளது.

    இதுகுறித்து அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கூறியதாவது:-

    டெல்லியில் பா.ஜனதா தலைவர்களிடம் எடப்பாடி பழனிசாமி தனது நிலைப்பாட்டை தெரிவிக்க அவ்வப்போது தம்பிதுரையை அனுப்பி பேச வைப்பது வழக்கம். அதே போல் இந்த முறையும் தம்பிதுரை சென்று உள்துறை மந்திரி அமித்ஷாவையும், பா.ஜனதா தேசிய தலைவர் நட்டாவையும் சந்தித்து பேசி உள்ளார்.

    கர்நாடக மாநில சட்ட சபை தேர்தல் அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் அந்த மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான கோலார் தங்க வயல், பெங்களூரு மற்றும் ராம்ராஜ்நகர் பகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட விரும்புகிறது.

    இங்கு எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அ.தி.மு.க.வுக்கு வாக்கு வங்கி உள்ளதால் கட்சியின் கர்நாடக மாநில அ.தி.மு.க. பிரிவை கூட ஜெயலலிதா தொடங்கி இருந்தார்.

    தற்போது இந்த தொகுதியில் பிரசாரம் செய்யவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

    இதுபற்றி அமித்ஷாவிடம் தம்பிதுரை எடுத்துரைத்துள்ளார். அது மட்டுமின்றி கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை ஆதரிப்பதன் மூலம் தமிழகத்திலும் இந்த கூட்டணி தொடருவது உறுதிபடுத்தப்படுகிறது.

    இந்த கூட்டணி தொடரும் பட்சத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அமையும் மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் தருவது குறித்தும் அமித்ஷா உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் இந்த ஆண்டே மத்திய மந்திரி சபையில் மாற்றம் செய்யப்பட்டால் அதில் தனக்கு மத்திய மந்திரி பதவி தருமாறு தம்பிதுரை கேட்டிருக்க கூட வாய்ப்பு உள்ளது.

    தம்பிதுரை இதற்கு முன்பு மத்திய மந்திரியாக இருந்தவர். இப்போது கடந்த பல வருடங்களாக பதவி இல்லாமல் உள்ளார். எனவே மத்திய மந்திரி பதவி மீது அவருக்கு ஆசை உண்டு.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×