search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் பந்தல் திறப்பு விழா"

    • உழவர்சந்தை எதிரில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
    • விழாவிற்கு மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகர தி.மு.க. சார்பில், உழவர்சந்தை எதிரில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார்.மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். தண்ணீர் பந்தலை, மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், நுங்கு, நீர்மோர், தர்பூசணி பழம் ஆகியவற்றை வழங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    மேலும் இதில், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாவட்ட பொருளாளர் சுகுமாரன், துணை மேயர் ஆனந்தய்யா, பகுதி செயலாளர் ராமு, மாநகராட்சி கவுன்சிலர்கள் மோசின்தாஜ் நிசார் அகமது, மாதேஸ்வரன், சென்னீரப்பா, மற்றும் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கே.பி. முனுசாமி தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
    • கூட்டுறவு வங்கி தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், உறுப்பி னர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    காவேரிப்பட்டணம்,

    கோடை வெயிலின் தாகத்தை தணிக்க கிருஷ்ண கிரி மாவட்டம், காவேரிப் பட்டினம் மேற்கு ஒன்றியம், நகர அ.தி.மு.க. சார்பில் காவேரிப்பட்டினம்- பாலக்கோடு பிரிவு சாலை மற்றும் காவேரிப்பட்டணம் பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. துணை பொது செயலாளரும், வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. முனுசாமி தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளரும், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அசோக் குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சமரசம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கே.பி. எம். சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், நகர செயலாளர் விமல், முன்னாள் நகர செயலாளர் வாசுதேவன், மாவட்ட அக்ரோ தலைவர் விக்ரம்குமார், அபிராமி மதனகோபால், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ,கூட்டுறவு வங்கி தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், உறுப்பி னர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×