என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பார்க் ஜின்"
- தென்கொரிய வெளியுறவு அமைச்சர் பார்க்ஜின் இன்று இந்தியா வந்தார்.
- அவர் டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்தார்.
புதுடெல்லி:
இந்தியா, தென் கொரியா இடையே தூதரக ரீதியிலான நட்புறவு ஏற்படுத்தப்பட்டதன் 50-வது ஆண்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அரசுமுறைப் பயணமாக தென்கொரிய வெளியுறவு மந்திரி பார்க் ஜின் இன்று இந்தியா வந்தடைந்தார். அவரை தூதரக அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை சந்தித்தார்.
இந்நிலையில், தென்கொரிய வெளியுறவு மந்திரி பார்க்ஜின் டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்தார்.
இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தியாவிற்கு தனது முதல் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள தென் கொரிய வெளியுறவு மந்திரி பார்க் ஜினை வரவேற்பதில் மகிழ்ச்சி. இன்றைய எங்கள் விவாதங்கள் நமது சிறப்பு மூலோபாய கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்லும் என பதிவிட்டுள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரையும் தென் கொரியா வெளியுறவு மந்திரி சந்திக்கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்