search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூலக நண்பர்கள் திட்டம்"

    • நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத்துணைத்தலைவா் ஆதிமூலம் தலைமை தாங்கினார்.
    • புதூர் பேரூராட்சி மன்றத்தலைவா் ரவிசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அரசு பொதுநூலக கட்டிடத்தில் தமிழ்நாடு அரசின் நூலக நண்பர்கள் திட்ட தொடக்க விழா நடந்தது. வாசகர் வட்டத்துணைத்தலைவா் ஆதிமூலம் தலைமை தாங்கி னார். இணைச்செயலாளா் செண்பகக்குற்றாலம், போட்டித் தேர்வு பொறுப்பாளா் விழுதுகள், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பொரு ளாளா் தண்டமிழ்தாசன்சுதாகர் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக புதூர் பேரூராட்சி மன்றத்தலைவா் ரவிசங்கர் கலந்து கொண்டு நூலக நண்பர்கள் திட்டத்தை தொடங்கி வைத்து தேர்வு செய்யப்பட்ட 22 தன்னார்வ லா்களுக்கு அடையாள அட்டை, புத்தகபைகள், புத்தகங்களை வழங்கி பேசினார். பின்னா் ரூ.5ஆயிரம் செலுத்தி 247-வது புரவலராக இணைத்து கொண்டார். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி சுடலை, குற்றாலம் ரோட்டரி கிளப் தலைவா் திருவிலஞ்சி குமரன், எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவா் ஜவஹர்லால்நேரு, எஸ்.எஸ்.ஏ.திட்ட மேற்பார்வையாளா் சுப்புலெட்சுமி, ஓவிய ஆசிரியா் முருகையா மற்றும் சமூக ஆர்வலா்கள் மணிகண்டன், கவிஞா்தங்கராஜ் பழனிச்சாமி, இளங்குமரனார் உள்பட பலா் கலந்து கொண்டனா். நல்நுாலகர் ராமசாமி நன்றி கூறினார்.

    ×