search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லட்ச தீப வழிபாடு"

    • இந்த ஆண்டு மகோற்சவ விழா இன்று தொடங்கி வரும் 21-ந் தேதி வரை நடக்கிறது.
    • அனைத்து பக்தர்களும் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி பயன் அடையுமாறு விழாக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அருள்மிகு வீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு பங்குனி மாத இறுதியில் மகோற்சவ விழா நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வாக தமிழ் புத்தாண்டு தினத்தன்று லட்சதீப விழா நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு மகோற்சவ விழா இன்று தொடங்கி வரும் 21-ந் தேதி வரை நடக்கிறது. இதில் தினமும் காலையில் ஆஞ்சநேயர் சாமிக்கு திருமஞ்சனமும், இரவில் சாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது. 

    மேலும், வருகின்ற 14-ந்தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் லட்ச தீப விழா நடக்கிறது. அன்று மாலை 6 மணியளவில் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் லட்ச தீபம் ஏற்றி வழிபடும் நிகழ்வு நடக்கவுள்ளது. இதில் அனைத்து பக்தர்களும் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி பயன் அடையுமாறு விழாக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், தொடர்ந்து அன்று மாலை 8 மணியளவில் சாமி வீதியுலாவும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தலைமையிலான விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×