என் மலர்
நீங்கள் தேடியது "மருத்துமனையில்"
- வாழப்பாடி யிலுள்ள மருத்துவர் செல்வம்பாள் மருத்துவ மனைக்கு வியாழக்கிழமை இரவு சிறுமியை அழைத்து சென்றுள்ளனர்.
- மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வாழப்பாடி:
வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான 22 வயது இளைஞர் ஒருவருடன் நெருங்கி பழகி யதில் கர்ப்பமானார். இது பெற்றோருக்கு தெரிய வந்ததால், வாழப்பாடி யிலுள்ள மருத்துவர் செல்வம்பாள் மருத்துவ மனைக்கு வியாழக்கிழமை இரவு சிறுமியை அழைத்து சென்றுள்ளனர்.
சிறுமியின் வயிற்றில் 7 மாதத்திற்கு மேல் கரு வளர்ந்து விட்டதால், அந்த குறை மாத குழந்தையை, மருத்துவர் செல்வாம்பாள் பிரசவிக்க செய்ததாக கூறப்படுகிறது. குழந்தையை பிரசவித்த பிறகு சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட தால், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சேலம் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் வளர்மதி, வாழப்பாடி அரசு தலைமை மருத்துவர் ஜெய செல்வி, பேளூர் வட்டார மருத்துவ அலுவ லர் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர், மருத்துவர் செல்வாம்பா ளிடம் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து, திருமண மாகாத சிறுமிக்கு பிரசவ சிகிச்சை அளித்த பெண் மருத்துவர் செல்வம்பாள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, வாழப்பாடி அரசு தலைமை மருத்துவர் ஜெயசெல்வி வாழப்பாடி போலீசில் புகார் செய்தார்.
இவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீஸார், சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர் செல்வாம்பாளை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவு செய்தனர்.
இதுகுறித்து தகவல் தெரியவந்ததால் சோர்ந்து காணப்பட்ட மருத்துவர் செல்வாம்பாள், நேற்றிரவு வாழப்பாடியிலுள்ள அவரது மருத்துவமனை யிலேயே மயங்கி விழுந்தார். சிகிச்சைக்காக இவர் அரசு மருத்துமனையில் அனும திக்கப்பட்டுள்ளதால், போலீசார் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.வாழப்பாடியில் சிறுமி உயிரிழந்த வழக்கு விசாரணை:
மயங்கி விழுந்த பெண் மருத்துவர் மருத்துமனையில் அனுமதி