என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கயிறு திரிக்கும்"

    • கயிறு திரிக்கும் கம்பெனியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாநகராட்சி க்குட்பட்ட அசோகபுரம் நேரு வீதியை சேர்ந்தவர் சின்னசாமி (53).

    இவர் மொடக்குறிச்சி அருகே வெண்டிபாளையம் அடுத்த காந்திபுரம் அருகில் உள்ள பால தண்டாயுதபாணி வீதியில் கயிறு திரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கயிறு திரிக்கும் கம்பெனியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து மொடக்குறிச்சி மற்றும் ஈரோடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 9 பேர் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

    இந்த தீ விபத்தில் கயிறு திரிக்கும் நார்கள் மற்றும் மிஷின்கள் எரிந்து சேதமாகி யது. தகவல் அறிந்த மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன் தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி னர்.

    தீயணைப்புத் துறையின் முதல் கட்ட விசாரணையில் அருகிலுள்ள நிலத்தில் புற்கள் மற்றும் செடி, கொடிகள் பற்றி தீ எரிந்ததால் அருகில் உள்ள கயிறு திரிக்கும் கம்பெ னிக்கு தீ பரவி பற்றி கொண்டது என தெரிவித்தனர்.

    தீயில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நார்கள் மற்றும் மிஷின்கள் சேதம் அடைந்ததாக பாதிக்க ப்பட்டவர் தெரிவித்தார்.

    ×