என் மலர்
நீங்கள் தேடியது "லவச கண் சிகிச்சை முகாம்"
- முகாமில் 359 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
- 96 போ் கண்புரை அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
நத்தம்:
நத்தம் தாலுகா செந்துறை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், செந்துறை சக்தி பவுண்டேசன் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தியது.
இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் சவரிமுத்து தலைமை தாங்கினார். சக்தி பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் நிர்வாகிகள் மணி, ஜெயராம்,அய்யணன், தனம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். முருகன் வரவேற்று பேசினார்.
இந்த முகாமில் 359 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 96 போ் கண்புரை அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.