search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு பேருந்துகள் இயக்கம்"

    • கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க போதிய அலுவவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஆயுதபூஜை, விஜயதசமி உள்பட தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கடுவதாக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஆயுத பூஜை பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 09/10/2024 மற்றும் 10/10/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிசாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை. திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 09/10/2024 (புதன்கிழமை) அன்று 225 பேருந்துகளும், 10/10/2024 (வியாழக்கிழமை) அன்று 880 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 09/10/2024 புதன்கிழமை அன்று 35 பேருத்துகளும் 10/10/2024 வியாழக்கிழமை) அன்று 265 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மாதாரைத்திலிருந்து 09/10/204 மற்றும் 10/10/2024 ஆகிய நாட்களுக்கு 110 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார புதன் கிழமை அன்று 6,582 பயணிகளும் வியாழக்கிழமை அன்று 22.236 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 21,311 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும். பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம்.
    • ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

    தமிழகத்தில் வாரயிறுதி நாட்களையொட்டி, வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளை இயக்கு உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    17/05/2024 (வெள்ளிக்கிழமை) 18/05/2024 (சனிக்கிழமை) மற்றும் 19/05/2024 (ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்தம் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில். கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 17/05/2024 (வெள்ளிக் கிழமை) அன்று 555 பேருந்துகளும் 18/05/2024 (சனிக்கிழமை) அன்று 645 பேருந்துகளும், 19/05/2024 (ஞாயிற்றுக் கிழமை) 280 பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து நாகை. வேளாங்கண்ணி. ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 17/05/2024, 18/05/2024 மற்றும் 19/05/2024 ( வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை) அன்று 195 திட்டமிடப்பட்டுள்ளது.

    பேருந்துகளும் இயக்க எனவே, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 17/05/2024 (வெள்ளிக் கிழமை) அன்று 555 பேருந்துகளும் 18/05/2024 (சனிக்கிழமை) அன்று 645 பேருந்துகளும், 19/05/2024 (ஞாயிற்றுக் கிழமை) 280 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 17/05/2024 வெள்ளிக் கிழமை அன்று 65 பேருந்துகளும் 18/05/2024 சனிக்கிழமை அன்று 65 பேருந்துகளும் மற்றும் 19/05/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று 65 பேருந்துகளும், மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க

    திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தருமபுரியில் இருந்து திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் சிறப்பு பேருந்துகளில் பயணித்த வண்ணம் உள்ளனர்.
    • தருமபுரியில் மட்டும் 55 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தருமபுரி மண்டல நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

    தருமபுரி, 

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.

    அதேபோல், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு உள்ள கிரிவலப் பாதையில் கிரிவலம் சுற்றி வந்து அண்ணாமலையாரை வழிபட்டு செல்கின்றனர்.

    ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமியை விட சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக அண்ணாமலையார் கோவிலுக்கு சித்ரா பவுர்ணமியான இன்றும், நாளையும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் செல்கின்றனர்.

    அதன்படி, சேலம் கோட்டம் தருமபுரி மண்டலம் சார்பில் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேற்று காலை முதல் இன்று இரவு 12 மணி வரை 188 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    தருமபுரியில் இருந்து திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் சிறப்பு பேருந்துகளில் பயணித்த வண்ணம் உள்ளனர்.

    தருமபுரியில் மட்டும் 55 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தருமபுரி மண்டல நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

    இதனால் இன்று தருமபுரி பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    • பொது தேர்வு முடிந்த நிலையில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பெற்றோருடன் ஊர் திரும்புகின்றனர்
    • அனைத்து பள்ளிகள் வழியாக சென்று வரும் அனைத்து அரசு பஸ்களும் பள்ளி அருகே நின்று செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்திலிருந்து கோடை விடுமுறை மற்றும் பொது தேர்வுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அரசு போக்குவரத்து கழக தருமபுரி மண்டல பொது மேலாளர் ஜீவரத்தினம் கூறியதாவது:-

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட தனியார் பள்ளிகளில் வெளியூர்களிலிருந்து வந்து தங்கி படித்து வந்த பிளஸ் 1 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவியர் தற்போது பொது தேர்வு முடிந்த நிலையில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பெற்றோருடன் ஊர் திரும்புகின்றனர் . அவர்களின் வசதிக்காக வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் பயணிகள் வருகைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் விடுமுறையில் வெளி மாவட்டங்களில் இருந்து ஒகேனக்கல் சுற்றுலா தளத்துக்கு வருபவர்களுக்காக தருமபுரி மண்டலத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தற்போது பொது தேர்வு உட்பட அனைத்து வகுப்புகளுக்கும் நடந்து வரும் தேர்வை ஒட்டி தேர்வு மையங்கள் மற்றும் அனைத்து பள்ளிகள் வழியாக சென்று வரும் அனைத்து அரசு பஸ்களும் பள்ளி அருகே நின்று செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×