என் மலர்
நீங்கள் தேடியது "முதியவர் rape"
- செல்வம் (வயது 54) சிறுமியிடம் தனக்கு பீடி வாங்கிக் கொண்டு வர பணம் கொடுத்துள்ளார்
- செல்வம் அந்த மாணவிலை கையை பிடித்து இழுத்து வாயைப் பொத்தி அருகில் உள்ள கருவக்காட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது
கடலூர்:
பெண்ணாடம் பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பில் மாணவி படித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு மளிகை சாமான் வாங்குவதற்கு சென்றுள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த செல்வம் (வயது 54) சிறுமியிடம் தனக்கு பீடி வாங்கிக் கொண்டு வர பணம் கொடுத்துள்ளார். மாணவியும் கடைக்கு சென்று மளிகை பொருட்களையும், செல்வத்திற்கும் பீடியும் வாங்கி வந்துள்ளார். பீடியை செல்வத்திடம் கொடுத்துள்ளார். அது சமயம் செல்வம் அந்த மாணவிலை கையை பிடித்து இழுத்து வாயைப் பொத்தி அருகில் உள்ள கருவக்காட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. நடந்த சம்பவத்தை மாணவி அவரது தங்கையிடம் கூறியுள்ளார். தங்கை தாயிடம் கூறவே, இது குறித்து அவரது தாய் ஆவனங்குடி போலீசாரிடம் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் செல்வத்தை போக்சோ பிரிவில் கைது செய்தனர். திட்டக்குடி அருகே 54 வயதான முதியவர் மாணவிலை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.