என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமத்துவ நாள்"

    • இந்தியாவிலேயே அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடும் ஒரே மாநிலம் தமிழ்நாடு
    • நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறது.

    அண்ணல் அம்பேத்கர் 135-வது பிறந்த நாளான இன்று சமத்துவ நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி வருகிறது.

    தமிழ்நாடு அரசின் சமத்துவ நாள் விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

    * பொருளாதார வளர்ச்சியில் நாட்டில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு முன்னேறி உள்ளது

    * எல்லோருக்கு எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

    * இந்தியாவிலேயே அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடும் ஒரே மாநிலம் தமிழ்நாடு

    * தமிழகத்தை பிரித்தாளும் சூழ்ச்சிகளை கண்டறிந்து நாம் வீழ்த்த வேண்டும்.

    * பட்டியலின, பழங்குடியின மக்கள், சமூகம் மற்றும் பொருளாதார விடுதலை அடைய திமுக அரசு பாடுபடும்.

    * நீட் ஒழிப்பே அனிதாவின் மரணத்திற்கான நீதி, நீட் ஒழிப்பில் அரசு உறுதி

    * நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறது

    * திராவிட மாடல் ஆட்சியில் எல்லா நாளும் சமத்துவ நாளாக அ நாளாக அமையட்டும்

    என்று தெரிவித்தார்.

    • அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
    • அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள் தமிழ்நாடு அரசு சார்பில் சமத்துவ நாள் விழாவாக இன்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்து உருவப்படத்துக்கு மலர் தூவி வணங்கினார்.

    அங்கு அவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக அமைச்சர்கள் வரவேற்றனர்.

    இதைத் தொடர்ந்து அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றார். உறுதி மொழியை அவர் வாசிக்க அங்கிருந்த அனைவரும் திரும்ப சொல்லி உறுதிமொழி ஏற்றனர். அந்த வாசகம் வருமாறு:-

    சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதி ராகவும், தொடர்ந்து போ ராடி, ஒதுக்கப்பட்டவர்களு டைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கருடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமு தாயத்தை அமைக்க, நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒரு போதும் அடையாளம் காண மாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்து வத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன்.

    இவ்வாறு உறுதிமொழி ஏற்றனர்.

    • மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றனர்.
    • அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    மதுரை

    அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 14-ந்தேதியை சமத்துவ நாளாக கடைப்பிடிக்க தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. இதில் அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி ஒதுக்கப்பட்டவர்க ளுடைய உரிமைகளுக்காக வும், ஒடுக்கப்பட்ட வர்களுடைய சமத்துவத் திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமை களை பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியல மைப்பு சட்டத்தை வகுத்து தந்த அம்பேத்கர் பிறந்த நாளில் சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சகமனிதர்களிடம் சமத்து வத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என்று இந்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் நாகராஜன், துணை ஆணையாளர்கள்முஜிபூர் ரகுமான், தயாநிதி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி ஆணையாளர் (கணக்கு) விசா லாட்சி, உதவி ஆணை யாளர் (பணி) ஆறுமுகம், கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×