என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "84 சதவீதம் வசூல்"

    • குடியிருப்புகள், காலியிடங்களுக்கு வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • குடிநீர் வரி இதுவரை ரூ.6 கோடி வசூலாகி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகள். காலியிடங்களுக்கு சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி மற்றும் மாநகராட்சி குத்தகை இனங்க ளுக்கான அனுமதிப்பதற்கான வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இதில் மாநகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி போன்றவை பிரதான வரி வருவாய் ஆகும். இந்த வரி இனங்கள் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை முதல் தவணையிலும் அக்டோபர் முதல் மார்ச் வரை 2-வது தவணையிலும் ஆண்டு தோறும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது 2-வது தவணை காலம் கடந்த 31 ந் தேதியுடன் முடி வடைந்தது. இதற்காக கடந்த மார்ச் மாதத்தில் வரிபாக்கி வைத்துள்ள வர்களிடம் வரி வசூலிக்க மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

    இதன் பேரில் 2022-2023-ம் ஆண்டில் மாநகராட்சி பகுதியில் சொத்து வரி ரூ.51 கோடி விதிக்கப்பட்டது. அதில் தற்போது 83 சதவீதம் அதாவது ரூ.42 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

    இதில் குடிநீர் வரி ரூ.7 கோடி விதிக்கப்பட்ட நிலையில் இதுவரை ரூ.6 கோடி வசூலாகி உள்ளது. அதாவது 84 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொழில் வரியாக ரூ.13 கோடி விதிக்கப்பட்டதில் ரூ.6 கோடி அதாவது 43 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    குத்தகை, ஏலம் இனங்கள் போன்ற இதர வரி இனங்களுக்கு ரூ.34 கோடி விதிக்கப்பட்டதில் ரூ.22 கோடி அதாவது 60 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாநகராட்சிக்கு வரி தொகையை நிலுவை வைத்துள்ளவர்கள் வரும் 30-ந் தேதிக்குள் செலுத்திட கடைசி நாள் ஆகும். அதன்பிறகும் வரி தொகையை செலுத்தாமல் இருந்தால் நீதிமன்ற நடவடி க்கை மூலம் சொத்துக்கள் ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    ×