search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sudden death of worker தொழிலாளி"

    • சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டான பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தரையில் உட்கார்ந்தார்.

    சேலம்:

    சேலம் தாதம்பட்டி எஸ்.கே.டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 44). தொழிலாளியான இவர், இன்று காலை சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டான பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தரையில் உட்கார்ந்தார்.

    உடனே அந்த பகுதியினர் அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் குழுவினர், அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, சிறிது நேரத்தில் சரவணன் உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×