search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர் அம்பேத்கர்"

    • தலித் ஆசிரியர் இடைநீக்கத்தை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
    • "சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன என கேட்கிறார்கள். சொல்லிருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சஸ்பெண்ட் செய்கிறேன்"

    "கல்விக்கு கடவுள் சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை" எனக்கூறியதால் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியை ஹேம்லதா பைர்வா மீதான இடைநீக்கம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வருக்கு டாக்டர் அம்பேத்கர் நினைவு நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் பாரான் மாவட்டத்தில் கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள லக்டாய் கிராமத்தில், ஆரம்பப் பள்ளி ஆசிரியையாக ஹேம்லதா பைர்வா என்பவர் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழாவின் மேடையில், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் கடவுள் சரஸ்வதியின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    அப்போது ஆசிரியை ஹேம்லதா பைர்வா இரு தலைவர்கள் உடன் சரஸ்வதியின் புகைப்படம் வைப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், 'கல்விக்கு சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை' என்று ஆசிரியை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த பிப்ரவரி 22-ம் தேதி ராஜஸ்தானின் கல்வி அமைச்சர் மதன் திலாவர், பாரான் மாவட்டத்தில் உள்ள கிஷான்கஞ்ச் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், "சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன என கேட்கிறார்கள். சொல்லிருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சஸ்பெண்ட் செய்கிறேன்" என தெரிவித்திருந்தார்.

    கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்புக்குப் பின், பாரான் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, அந்த ஆசிரியைக்கு பணியிடை நீக்கத்திற்கான உத்தரவை பிறப்பித்தார். குற்றச்சாட்டுகள் தொடர்பான முதற்கட்ட விசாரணை முடிவடைந்ததை அடுத்தே இடைநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தலித் ஆசிரியர் இடைநீக்கத்தை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தின் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவருமான டிகா ராம் ஜூலி, தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஆசிரியை ஹேம்லதா பைர்வாவை தடுத்த கிராம மக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில், அவரை இடைநீக்கம் செய்ததன் மூலம் பாஜக அரசு தலித் விரோத அரசு என்பதை நிரூபித்துள்ளது என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக, லவ் ஜிஹாத், இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்புகொண்டு மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி, கோட்டா மாவட்டத்தின் சங்கோட் பகுதியில் உள்ள அரசு மூத்த மேல்நிலைப் பள்ளி கஜூரியைச் சேர்ந்த 3 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும் பணியில் சேர்க்க வேண்டும் என மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • “கல்விக்கு சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை" எனக்கூறிய ஆசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்
    • “சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன என கேட்கிறார்கள். சொல்லிருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சஸ்பெண்ட் செய்கிறேன்”

    ராஜஸ்தானில் குடியரசு தினத்தின் போது மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் படங்களுக்கு மத்தியில் சரஸ்வதியின் புகைப்படத்தை வைக்க மறுத்து, "கல்விக்கு கடவுள் சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை" எனக்கூறிய ஆசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் பாரான் மாவட்டத்தில் கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள லக்டாய் கிராமத்தில், ஆரம்பப் பள்ளி ஆசிரியையாக ஹேம்லதா பைர்வா என்பவர் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழாவின் மேடையில், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் கடவுள் சரஸ்வதியின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    அப்போது ஆசிரியை ஹேம்லதா பைர்வா இரு தலைவர்கள் உடன் சரஸ்வதியின் புகைப்படம் வைப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், 'கல்விக்கு சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை' என்று ஆசிரியை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த பிப்ரவரி 22-ம் தேதி ராஜஸ்தானின் கல்வி அமைச்சர் மதன் திலாவர், பாரான் மாவட்டத்தில் உள்ள கிஷான்கஞ்ச் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், "சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன என கேட்கிறார்கள். சொல்லிருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சஸ்பெண்ட் செய்கிறேன்" என தெரிவித்திருந்தார்.

    கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்புக்குப் பின், பாரான் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, அந்த ஆசிரியைக்கு பணியிடை நீக்கத்திற்கான உத்தரவை பிறப்பித்தார். குற்றச்சாட்டுகள் தொடர்பான முதற்கட்ட விசாரணை முடிவடைந்ததை அடுத்தே இடைநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில், லவ் ஜிஹாத், இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக 2 ஆசிரியர்கள் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    • சட்ட மாமேதை அம்பேத்கரின் 132-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
    • பொன்னேரி அம்பேத்கர் திரு உருவச் சிலை முன் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் உறுதிமொழி எடுத்தது.

    பொன்னேரி:

    சட்ட மாமேதை அம்பேத்கரின் 132-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் வினோத் தலைமையில் பொன்னேரியில் உள்ள அம்பேத்கர் திரு உருவச் சிலைக்கு 500-க்கும் மேற்பட்ட மக்களோடு அணிவகுப்பு நடத்தி திருவுருவச் சிலைக்கு புகழ் வணக்கம் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் கோ.தேவராசு, வழக்கறிஞர் அணி செயலாளர் அருள்தாசு, கொள்கை பரப்புச் செயலாளர் வெற்றிச்செல்வன், மையக்குழு உறுப்பினர் இளம்தென்றல் யாபேசு, ஒன்றிய செயலாளர் மோகன் மற்றும் ஆதித்தமிழர் கலைக்குழு மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்று புகழ் வணக்கம் செலுத்தினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    ×