என் மலர்
நீங்கள் தேடியது "அரங்கில்"
- நாகர்கோவில் அரசு தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது.
- 4-வது புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் குமரி மாவட்டத்தின் 4-வது புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் சிறைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட அரங்கில் சிறைவாசி களுக்காக புத்தகம் தானம் பெற நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இதையொட்டி புத்தக கண்காட்சியில் தானம் பெற பெட்டிகள் வைக் கப்பட்டுள்ளன. இதில் அமைச்சர் மனோதங்கராஜ், மேயர் மகேஷ் ஆகியோர் புத்தகங்களை வழங்கி தானம் செய்தனர்.
நிகழ்ச்சியில் பாளை யங்கோட்டை சிறைத்துறை சூப்பிரண்டு சங்கர், மாவட்ட கிளை சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜமாணிக்கம் மற்றும் சிறை காவலர்கள் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் குமரி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு புத்தகம் தானம் செய்கிறார்கள்.