என் மலர்
நீங்கள் தேடியது "விழுந்து பலி"
- கிணற்றின் அருகில் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.
- அவர் குடிபோதையில் தவறி கிணற்றில் விழுந்தார்.
ஈரோடு,
ஈரோடு அடுத்துள்ள பெரியசேமூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (52). கூலித்தொழிலாளியான இவர் நேற்று மாலை அங்குள்ள விவசாய தோட்டத்து கிணற்றின் அருகில் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் குடிபோதையில் தவறி கிணற்றில் விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இது குறித்து ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி முருகனின் உடலை மீட்டனர்.
இது குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிணற்றில் பூனை ஒன்று தவறி விழுந்து இறந்து விட்டது.
- ஆனந்த் கயிறு மூலம் மேலே ஏறிய போது கை நழுவி கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.
சென்னிமலை:
சென்னிமலை பி.ஆர்.எஸ்.ரோட்டில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கம்பெனி செயல்படுகிறது. இங்கு கொளத்தூர் சவேரியர்பாளையம் அண்ணா நகரை சேர்ந்த ஆனந்த் (35) என்பவர் தங்கி பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு கம்பெனி வளாகத்தில் உள்ள கிணற்றில் பூனை ஒன்று தவறி விழுந்து இறந்து விட்டது. இதனையடுத்து பூனையை கிணற்றில் இறங்கி எடுத்துள்ளார்.
பூனையினை எடுத்து விட்டு ஆனந்த் கயிறு மூலம் மேலே ஏறிய போது கை நழுவி கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.
பின்னர் உடனிருந்த ராஜேந்திரன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் ஆனந்தினை கிணற்றில் இருந்து மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலே ஆனந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.