என் மலர்
நீங்கள் தேடியது "பட்டாசு தொழில்"
- பட்டாசு தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் சிவகாசியில் நடந்தது.
- மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
பட்டாசு தயாரிக்கும் தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் சிவகாசியில் நடந்தது
குறைந்தபட்ச ஊதியச் சட்டப்பிரிவு 5-ன்படி, பட்டாசு உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலா ளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க உரிய விசார ணைகள் மேற்கொண்டு மாநில அரசுக்கு ஆலோ சனை தெரிவிக்க வேண்டும்.
இதன்படி தமிழக அரசு ஒரு ஆலோசனைக்குழுவை அமைத்து ஆணை பிறப்பித்தது. அதில் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தலைவராகவும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) செயலாளராகவும் கொண்ட மேற்கண்ட குழுவின் முதல் கருத்துக் கேட்பு கூட்டம் சிவகாசி டான்பாமா திருமண மண்டபத்தில் நடந்தது.
இதில் வேலையளிப்பவர் பிரதிநிதிகளும், தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கருத்து களை எடுத்துரைத்தனர். பின்னர் செங்கமலபட்டியில் அமைந்துள்ள விநாயகா பயர் ஒர்க்ஸ் மற்றும் சோனி பயர் ஒர்க்சில் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக அங்கு பணிபுரியும் தொழிலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
நாளை (19-ந் தேதி) வெம்பக்கோட்டை மற்றும் திருவேங்கடத்தில் உள்ள பட்டாசு தொழிற்சா லைகளில், பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிலாளர்களிடமும் கருத்துக் கேட்பு நடத்த மேற்கண்ட குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
அப்போது பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பான கருத்து ருக்களை வாய்மொ ழியாகவும், எழுத்து பூர்வமாகவும் வழங்கலாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.