search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏர் கூலர்"

    • இப்போதே சண்டையென்றால் மாமியார் வீட்டில் என்னவெல்லாம் நடக்கும்.
    • இந்த விவகாரத்தில், மணமகன் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவில் ஏர் கூலர் அருகில் யார் உட்காருவது என மணமகன் - மணமகள் வீட்டார் சண்டையிட்டுக் கொண்டதால் கோபத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.

    இப்போதே சண்டையென்றால் மாமியார் வீட்டில் என்னவெல்லாம் நடக்கும் எனக்கூறி மணப்பெண் இந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

    இந்த விவகாரத்தில், மணமகன் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

    • டெல்லியில் கடும் வெப்பம் நிலவி வருவதால் அங்கு இருக்கும் டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளது.
    • இதனால் பூங்காவின் நிர்வாகம் அங்கு இருக்கும் 1300 விலங்குகளுக்கும் வெப்ப அலையில் இருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    இந்தாண்டு கோடைக்காலம் மிகவும் கொடுமையாக இருக்கிறது. மக்கள் வெயிலில் வாடி வதங்குகின்றனர். மனிதர்களாலே இந்த வெயிலின் சூட்டை தாங்கிக் கொள்ள முடியவில்லை. வாயில்லா ஜீவங்கள் என்ன அவஸ்தை படுகின்றனர் என்பதை சொல்லவா வேண்டும்.

    டெல்லியில் கடும் வெப்பம் நிலவி வருவதால் அங்கு இருக்கும் டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பூங்காவின் நிர்வாகம் அங்கு இருக்கும் 1300 விலங்குகளுக்கும் வெப்ப அலையில் இருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    கோடை வெப்பத்தில் இருந்து தப்பிபதற்கு ஃப்ரூட் ஐஸ் பால், ஐஸ் கிரீம்உணவாக தருகின்றனர் தண்ணீரை சிபிரிங்க்லர் முறையில் விலங்குகள் மீது தெளிக்கின்றனர். விலங்களுக்கு சாப்பாட்டு அளவை குறைத்து நீர்சத்து மிகுந்த உணவுகளையும் , நீர் நிறைந்த ஆகாரத்தையும் கொடுக்கின்றனர்.

     

    ஒவ்வொரு விலங்களுக்கு ஏற்றார்போல இந்த பணிகளை செய்து வருகின்றனர். விலங்குகள் இருக்கும் இடத்தில் ஏர் கூலர்கல்களும் வைத்துள்ளனர்.

    • 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டுகிறது.
    • வீடுகளில் எந்நேரமும் மின் விசிறியை சுழல விட வேண்டிய நிலை தான் காணப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூரில் சமீபநாட்களாக வெயில் வாட்டி வதைக்க துவங்கியு ள்ளது. 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டுகிறது.கோடை துவங்கியுள்ள நிலையில் வெயிலின் சுடுதல் மக்களை வாட்டி வதைக்க துவங்கியிரு க்கிறது.கடந்த சில நாட்களாக அதிகபட்சம் 39 டிகிரி செல்சியஸ் அதாவது 102 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெயில் வாட்டுகிறது. இதனால் ஏர் கூலர், ஏ.சி., விற்பனை அதிகரிக்க துவங்கியிரு க்கிறது. வீடுகளில் எந்நேரமும் மின் விசிறியை சுழல விட வேண்டிய நிலை தான் காணப்படுகிறது.

    சில நாட்களில் பள்ளி தேர்வுகள், முடியவுள்ள நிலையில் ஊட்டி, கொடை க்கானல் உள்ள மலைப் பிரதேசங்களுக்கு செல்லவும் மக்கள் தயாராகி வருகின்றனர்.குறைந்தபட்சம் வார விடுமுறை நாட்களிலா வது, வெயிலில் இருந்து தப்பிக்க மலை பிரதேசம் செல்லும் திட்டமிடலில் பலரும் உள்ளனர். ஊட்டியில் அதிக பட்சம் 24 டிகிரி செல்சியது அதாவது 74 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை நிலவுகிறது.

    ×