search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரெடிட் கார்டு"

    • ‘ஷாப்பிங் டிஸார்டர்’ எனப்படும் ஒருவகையான மனநிலை கோளாறுக்கு வித்திடும்.
    • மன அழுத்தத்தில் இருந்து மீள்வதற்காக ஷாப்பிங் செல்வார்கள்.

    பெண்களுக்கு பிடித்தமான விஷயங்களுள் முதன்மையானது, 'ஷாப்பிங்'. அதனை சிறந்த பொழுதுபோக்காக கொண்டாடவும் செய்வார்கள். அதிலும் வீட்டுக்குள்ளேயே முடங்கி வெளி உலக தொடர்பு இல்லாமல் வாழும் பெண்களுக்கு வெளியே சென்று வருவதற்கான வாய்ப்பை ஷாப்பிங்தான் ஏற்படுத்திக்கொடுக்கும். அதனால் உற்சாகமாக கிளம்பிவிடுவார்கள்.

    மனதுக்கு பிடித்தமான பொருளை வாங்க செல்வதாக இருந்தால் இன்னும் குஷியாகிவிடுவார்கள். அப்படி நெடுநாட்களாக வாங்க விரும்பிய பொருட்களை தேடி சென்று வாங்குவதற்கு முனைப்பு காட்டுவதில் தவறில்லை. அந்த பொருளையும் தவிர்த்து அங்கு பார்த்ததும் பிடித்து போகும் பொருட்களை எல்லாம் வாங்குவதற்கு விரும்பும் மனநிலை சிலரிடம் தொற்றிக்கொள்ளும்.

    ஏற்கனவே ஆடை, அணிகலன்கள் நிறைய இருந்தாலும் மீண்டும் வாங்குவதற்கு முனைப்பு காட்டுவார்கள். அத்தகைய நிலைப்பாடு 'ஷாப்பிங் டிஸார்டர்' எனப்படும் ஒருவகையான மனநிலை கோளாறுக்கு வித்திடும்.

    இத்தகைய பாதிப்பு கொண்டவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்குவதால் மட்டும் மன நிறைவு ஏற்படாது. தற்போது தேவைப்படாத அவசியமில்லாத பொருட்களை கூட வாங்குவார்கள். அந்த பொருட்கள் அவர்களுக்கு பிடித்தமானவையாக இருக்கும் என்பது மட்டுமே அதற்கான காரணமாக இருக்கும்.

    ஆனால் அவை தற்போது பயன்படாத பொருளாகவே இருக்கும். அப்படி அவசியமின்றி விரும்பிய பொருட்களை வாங்கிக்கொண்டே இருப்பது ஷாப்பிங்குக்கு அடிமைப்படுத்தி விடும்.

    அப்படிப்பட்டவர்களை வீட்டுக்குள்ளேயே இருப்பதால் பொழுது போக்குக்காக ஷாப்பிங் செல்கிறார்கள் என்றும் கூறி விட முடியாது. அடிப்படை தேவை பற்றியோ, கையிருப்பாக வைத்திருக்கும் பணம் பற்றியோ சிந்திக்காமல் செலவு செய்யும் எண்ண ஓட்டமே அவர்களிடம் எட்டிப்பார்க்கும்.

    அதனால் பணத்தை இழக்க வைக்கும் பொழுதுபோக்காக அவர்களின் ஷாப்பிங் மாறிவிடக்கூடும். மன நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். சரியான திட்டமிடலுடன் செயல் படாவிட்டால் அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது சிரமமானது.

    தேவை அறிந்து பொருட்களை வாங்குவது வேறு. அவசியமின்றி பொருட்களை வாங்குவது வேறு. இவை இரண்டுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதனை கருத்தில் கொள்ளாமல் ஏற்படும் 'ஷாப்பிங் டிஸார்டர்' எனப்படும் மனநிலை கோளாறு ஆண்களை விட பெண்களைத்தான் அதிகம் பாதிக்கும். குறிப்பிட்ட பொருட்கள் மீது அலாதி பிரியம் கொள்வது அதற்கு காரணமாக இருக்கலாம்.

    இந்த ஷாப்பிங் டிஸார்டர் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதை ஒருசில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    * தினசரியோ அல்லது அடிக்கடியோ ஏதாவது ஒரு பொருளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.

    * மன அழுத்தத்தில் இருந்து மீள்வதற்காக ஷாப்பிங் செல்வார்கள்.

    * கிரிடிட் கார்டு வைத்திருப்பவர்களாக இருந்தால் பணத்தை பற்றி கவலைப்படாமல் அதில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் தொகை காலியாகும் வரை பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுவார்கள்.

    * பிடித்தமான பொருட்களை பார்த்துவிட்டாலே மற்றவர்கள் முன்னிலையில் அதிக மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

    * தற்போது தேவைப்படாத பொருட்களை வாங்குவார்கள். அதனை உபயோகப்படுத்தபோகிறோமா என்பதை பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள். அந்த பொருள் பிடித்துவிட்டால் போதும். அதை வாங்கியே தீர வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார்கள்.

    * ஷாப்பிங் செல்வதற்காக பொய் பேசக்கூட தயங்கமாட்டார்கள். சில சமயங்களில் மட்டுமே செய்த தவறுக்காக வருத்தப்படுவார்கள். ஆனாலும் ஷாப்பிங் செல்வதை ஒருபோதும் தவிர்க்கமாட்டார்கள்.

    * ஷாப்பிங் செல்வதற்காக மற்றவர்களிடம் கடன் வாங்கவும் தயங்க மாட்டார்கள். அதேவேளையில் வாங்கிய கடனை திருப்பி கொடுப்பதற்கு ஆர்வம் காட்டமாட்டார்கள்.

    * ஏற்கனவே பட்ஜெட் போட்டுவிட்டு ஷாப்பிங் சென்றிருந்தாலும் கூட அதையும் மீறி தாராளமாக செலவு செய்வார்கள்.

    * மனக்கவலை தரும் ஏதாவதொரு பிரச்சினையை எதிர்கொண்டால் அதில் இருந்து மீள்வதற்காகவோ, அதை மறப்பதற்காகவோ ஷாப்பிங் செல்வார்கள்.

    • ஜி-பே, போன் பே மூலம் கண்டக்டருக்கு கட்டணத்தை செலுத்தலாம்.
    • மே 1-ந் தேதி முதல் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது.

    சென்னை:

    நீண்ட தூரம் செல்லக் கூடிய அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் (எஸ்.இ.டி.சி.) மூலம் தினமும் 1000 பஸ்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் பெங்களூர், மைசூர், புதுச்சேரி, ஆந்திர மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது.

    இந்த பஸ்களில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது.

    கோடைக்காலம் என்பதால் தற்போது அனைத்து பஸ்களிலும் முழு இடங்களும் நிரம்பி விடுகின்றன. குறிப்பாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏ.சி. வசதி உள்ள பஸ்களில் இடங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.

    இணையதளம் வழியாக எளிதாக முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் பயணிகள் வீட்டில் இருந்த படியே முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்கின்றனர்.

    இந்த நிலையில் பயணிகளுக்கு கூடுதலாக மின்னணு பணப் பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதி பரீட்சார்த்தமாக கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 1-ந் தேதி முதல் அனைத்து அரசு விரைவு பஸ்களிலும் இந்த வசதி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    1000 வழித்தடங்களில் இயக்கப்படும் விரைவு பஸ் களிலும் எலக்ட்ரானிக் டிக்கெட் மிஷின் வழங்கப்பட்டுள்ளது. இனி டிக்கெட் எடுக்க ரொக்கமாக பணம் கொடுக்க தேவையில்லை. வங்கி டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஜி-பே, போன் பே போன்றவற்றின் மூலம் கண்டக்டருக்கு கட்டணத்தை செலுத்தலாம். அதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மோகன் கூறியதாவது:-

    மின்னணு பண பரிவர்த்தனை திட்டத்தை அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மே 1-ந் தேதி முதல் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது.

    முன்பதிவு செய்யாமல் பஸ்சில் பயணிக்கும் பயணிகள் பஸ்சிற்குள் டிக்கெட் எடுக்கும் போது சில்லரை பிரச்சினை ஏற்படுகிறது. குடும்பமாக பயணிக்கும் போது ஆயிரக்கணக்கில் ரொக்கமாக பணம் செலுத்த வேண்டியிருக்கும். அப்போது சில்லரை கொடுப்பதில் கண்டக்டருக்கும் பயணிக்கும் இடையே தகராறு ஏற்படுவது உண்டு.

    இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஜி-பே, போன் பே போன்ற டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    டிக்கெட்டிற்காக பெரும் தொகையை கையில் எடுத்து செல்லத் தேவையில்லை. இந்த திட்ட செயல்பாடு வெற்றிகரமாக அமைந்ததால் அனைத்து பஸ்களிலும் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை
    • ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது

    கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

    2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட திருத்த நடவடிக்கை விதிமுறைகளை தனது ஐடி கட்டமைப்பில் கடைபிடிக்க கோடக் மஹிந்திரா வங்கி தவறியுள்ளது.

    ஆகவே தகவல் பாதுகாப்பு குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    ரிசர்வ் வங்கியின் இந்த தடையால் தற்போது இவ்வங்கி வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களின் பணம், வாடிக்கையாளர்களின் சேவை ஆகியவற்றில் எவ்விதமான பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆனாலும், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது. காரணம் இவ்வங்கி தனது பெரும்பாலான புதிய வாடிக்கையாளர்களை ஆன்லைன் வாயிலாகவும், மொபைல் சேவை வாயிலாக தான் பெறுகிறது.

    இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 13% வரை சரிவை கண்டுள்ளது.

    இதன்மூலம், கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனரான உதய் கோடக் தனது சொத்து மதிப்பில் சுமார் 10,831 கோடி ரூபாயை இழந்துள்ளார். நேற்றைய நிலவரப்படி அவரிடம் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருந்தது என ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் தெரிவித்துள்ளது.

    • கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை
    • ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது

    கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

    2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட திருத்த நடவடிக்கை விதிமுறைகளை தனது ஐடி கட்டமைப்பில் கடைபிடிக்க கோடக் மஹிந்திரா வங்கி தவறியுள்ளது.

    ஆகவே தகவல் பாதுகாப்பு குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    ரிசர்வ் வங்கியின் இந்த தடையால் தற்போது இவ்வங்கி வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களின் பணம், வாடிக்கையாளர்களின் சேவை ஆகியவற்றில் எவ்விதமான பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆனாலும், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது. காரணம் இவ்வங்கி தனது பெரும்பாலான புதிய வாடிக்கையாளர்களை ஆன்லைன் வாயிலாகவும், மொபைல் சேவை வாயிலாக தான் பெறுகிறது.

    • அவசர மருத்துவ தேவைக்கு கூடுதல் கார்டு பயன்படும்.
    • தேவைப்பட்டால் மட்டுமே கூடுதல் கார்டை பயன்படுத்த வேண்டும்.

    மத்திய அரசு ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிப்பதைத் தொடர்ந்து, புதிய கிரெடிட் கார்டுகளை வாங்குவது தற்போது மிகவும் எளிதான விஷயமாகும். உங்களுக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்தும் தகுதி வந்துவிட்டது என வங்கிகளின் கஸ்டமர் கேரில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டிருக்கும்.

    நம்மில் பலர் ஏற்கெனவே ஒரு சில கார்டுகளை வைத்திருப்போம். ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகளை வைத்திருப்பதன் மூலம் நம்முடைய கடன் வாங்கும் தகுதி உயரும். ரிவார்ட் மற்றும் கேஷ்பேக் பாயின்ட்ஸ் உள்ளிட்ட பயன்களை நாம் அனுபவிக்கலாம்.

    ஆனால் அதிக கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பது என்பது இருமுனை கத்தி போன்றது. எனவே பல கார்டுகளை எப்படி கையாளுவது? என்பதை இங்கே காணலாம்.

    கூடுதல் கிரெடிட் கார்டை வைத்திருப்பது நல்ல ஐடியா என்பதில் சந்தேகம் இல்லை. அவசர மருத்துவ தேவைக்கு கூடுதல் கார்டு பயன்படும். முக்கியமான கிரெடிட் கார்டை தொலைத்துவிட்டாலோ அல்லது தொழில்நுட்ப காரணங்களால் பயன்படுத்த முடியாமல் போகும் போது, கூடுதல் கார்டு உதவியாக இருக்கும். ஆனால், தேவைப்பட்டால் மட்டுமே கூடுதல் கார்டை பயன்படுத்த வேண்டும்.

    கைவசம் கூடுதலாக இருக்கும் கிரெடிட் கார்டுகளை, மொபைல் போன் வாங்குவதற்காகவோ, டி.வி. உள்ளிட்ட உடனடி அவசியம் அல்லாத பொருட்கள் வாங்குவதற்கோ பயன்படுத்த வேண்டாம்.

    கடன் வரம்பு அதிகமாக இருப்பதால், அதிகம் செலவு செய்ய வேண்டும் என்னும் எண்ணம் இருக்கும். இதனால் கடன் என்னும் பொறியில் சிக்க வேண்டி இருக்கும். இரு வழிகளில் கிரெடிட் கார்டு மூலமான செலவுகளைக் கட்டுப்படுத்தலாம்.

    செலவுகளை கட்டுப்படுத்துவதற்கென பிரத்தியேக செயலிகள் உள்ளன. இவற்றை பயன்படுத்தும்போது, அதிகம் செலவு செய்யும்போது எச்சரிக்கைகளை அந்த செயலி அனுப்பும். அடுத்ததாக நெட்பேங்கிங் உள்ளிட்ட இதர வழிகளில் பணத்தை செலுத்தலாம். பல வகையான கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் பட்சத்தில் பல சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. போனஸ் புள்ளிகள், கேஷ் பேக், தவிர சினிமா டிக்கெட் உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் இருக்கின்றன.

    எவ்வளவு சலுகைகள் இருந்தாலும் மூன்றுக்கு மேற்பட்ட கார்டுகளை வைத்திருப்பது ஏற்புடையதல்ல. அனைத்து கார்டுகளையும் கையாளுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இதர சலுகைகளுக்காக நீங்கள் 5 கார்டுகளை பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொண்டால், அனைத்து வங்கிகளும் உங்களுடைய பில் செலுத்தும் தேதியை நினைவுபடுத்தும் என சொல்ல முடியாது. ஒரு வேளை நினைவுபடுத்தினால் கூட, பணம் செலுத்திவிட்டோம் என நீங்கள் நினைக்க வாய்ப்பு இருக்கிறது.

    ஒருவேளை நீங்கள் சரியான நேரத்தில் பணத்தை செலுத்தவில்லை என்றால் உங்களுக்கு கிடைக்கக் கூடிய இதர சலுகைகளை விட அபராதம் அதிகமாக இருக்கும். சிறிய பலன்களுக்காக, அதிக அபராதம் செலுத்த வேண்டாம்.

    • கவுண்டர்களில் நீண்ட நேரம் காத்து நிற்காமல் உடனே செல்ல வசதியாக டிக்கெட் பெறுவதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.
    • கேட்டில் கார்டை காண்பிக்கும் போது உள்ளே செல்ல தானாகவே அனுமதி கிடைக்கும்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய டிக்கெட் எடுப்பதற்கு நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க பல்வேறு வசதிகளை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    டிக்கெட் கவுண்டர்களில் கட்டணம் செலுத்தி டோக்கன் பெறுதல், பயண அட்டை, கியூஆர் கோடு மற்றும் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெற்று செல்லுதல் போன்ற நடைமுறைகள் தற்போது உள்ளன.

    பயணிகள் சிரமமில்லாமல் எளிதாக டிக்கெட் தானியங்கி கேட்டுகளில் செல்ல வசதியாக புதிய தொழில் நுட்பங்கள் கையாளப்படுகின்றன. மெட்ரோ ரெயில்களில் நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கவுண்டர்களில் நீண்ட நேரம் காத்து நிற்காமல் உடனே செல்ல வசதியாக டிக்கெட் பெறுவதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.

    வார நாட்களில் பயணிகள் அதிகளவில் பயணிக்கிறார்கள். தினமும் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது.

    இந்நிலையில் மெட்ரோ ரெயில் 2ம் கட்ட பணியில் அமைகின்ற ரெயில் நிலையங்களில் மெட்ரோ ரெயில் பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில் கூடுதல் வசதிகளை நிர்வாகம் தர இருக்கிறது.

    கவுண்டர்களில் காத்து நின்று டிக்கெட் பெற்று பயணிப்பதற்கு பதிலாக பயணிகள் தங்கள் வங்கி டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டை காண்பித்து பயணம் செய்யும் நவீன தொழில் நுட்பம் கையாளப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் நுழைவு வாயலில் டெபிட், கிரெடிட் கார்டை காண்பித்தால் போதுமானது. கட்டண தொகை வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொள்வதோடு செல்போனில் இது பற்றிய விவரங்கள் வரும்.

    வங்கி அட்டையை பயன்படுத்தும் முறையில் பயணிகள் காத்து நிற்க தேவையில்லை. கேட்டில் கார்டை காண்பிக்கும் போது உள்ளே செல்ல தானாகவே அனுமதி கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி வீதம் அதிகம்.
    • கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது விருது புள்ளிகள் கிடைக்கும்.

    நவீன பொருளாதாரம் வழங்கும் எந்த வசதிகளையும் உடனடியாக புறக்கணிக்கவோ, அதைக் கொண்டாடவோ தேவையில்லை. கவனத்தோடு பயன்படுத்தலாம். தேவையில்லை என்றால் விட்டுவிடலாம்.

    அப்படித்தான் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதைப் பார்க்க வேண்டும். ஆனால் நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்கிறோம் என்கிற எண்ணம் இருக்க வேண்டும்.

    கிரெடிட் கார்டு மூலம் அதிக கடன் வாங்கிவிட்டு கட்ட முடியவில்லை என்றால் அதற்கு வட்டி, அபராதம், தாமதக் கட்டணம் என இன்னபிற வகைகளில் கூடுதல் பணத்தையும் இழக்க வேண்டும். எனவே நமது வருமானத்தை வழக்கம்போல திட்டமிட்டுக்கொண்டு, அதற்குள் கிரெடிட் கார்டு பயன்பாட்டையும் வைத்துக் கொண்டால் சிக்கல்கள் இல்லாமல் இருக்கலாம்.

    கிரெடிட் கார்டு கடனை திருப்பி செலுத்த ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட கால அவகாசம் தருகிறது. இந்த காலத்துக்குள் வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்திவிட வேண்டும். மொத்த நிலுவைத் தொகையில் குறைந்தபட்ச தொகையைக செலுத்தவும் வாய்ப்பு உண்டு.

    மீதமுள்ள தொகையைக் கடனாகக் கருதி அதற்கு வட்டி விதிக்கப்படும். ஆனால் கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி வீதம் அதிகம். கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்துக் கொள்ளவும் முடியும்.

    கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனை மாத தவணையாக திருப்பி செலுத்தும் வசதியும் உள்ளது. ஆனால் இதற்கான வட்டியும் அதிகம். உங்கள் மாத வருமானத்திலிருந்து தனிநபர் கடன் செலுத்துவதுபோல செலுத்த வேண்டும். நமது மாத வருமானத்தைப் போல குறைந்தபட்சம் 3 மடங்கிலிருந்து கடன் கிடைக்கலாம். நபர்களின் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனங்கள் இதை முடிவு செய்யும். ஆனால் கார்டை அதிகமாக பயன்படுத்துகிறோம், வருமானத்தின் எல்லை தாண்டி செலவு செய்கிறோம் என்று யோசித்தால் கிரெடிட் அளவைக் குறைக்கும்படி செய்து கொள்ளலாம். அல்லது திரும்ப அளித்து விடலாம்.

    கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது விருது புள்ளிகள் கிடைக்கும். இதற்கு சில சலுகைகள் உண்டு. அதிகப் புள்ளிகள் சேர்ந்தால், திரும்ப பொருள் வாங்கும் போது விலை குறைப்பு அல்லது சலுகை கிடைக்கும். சரியாகக் கையாண்டால் இந்த புள்ளிகள் மூலமும் பலன் பெறலாம். முந்தைய கடன் தொகையில் நிலுவை இருந்தால் மீண்டும் பொருள் வாங்கும் போது சலுகை கிடைக்காது. எனவே ஒரு கடனை முழுமையாக அடைத்துவிட்டு சலுகை பெறவும்.

    ×