search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வன்னியர்கள்"

    • 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்கள் 10.50 விழுக்காட்டுக்கும் கூடுதலான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளனர்
    • பொதுப்பிரிவுக்கான 31% இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு சமூகமும் பெற்ற பிரதிநிதித்துவம் எவ்வளவு?

    வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில், கடந்த 2018 முதல் 2022 வரை இடஒதுக்கீட்டின் கீழ் 10.5%ற்கும் மேல் வன்னியர் சமூகத்தினர் பயன்பெற்று வருவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்கள் 10.50% விழுக்காட்டுக்கும் கூடுதலாக பிரதிநிதித்துவம் பெற்றிருப்பதாக தமிழக அரசு விளக்கமளித்திருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில புள்ளி விவரங்களை மட்டும் அரைகுறையாகவும், திரித்தும் வெளியிட்டிருப்பதன் மூலம் வன்னியர்களுக்கு இழைத்த துரோகங்களை மறைக்க திமுக அரசு முயன்றிருக்கிறது. திமுக அரசின் இந்த மோசடி கண்டிக்கத்தக்கது.

    சென்னையைச் சேர்ந்த கொண்டயன்கோட்டை மறவன் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த பொன்பாண்டியன் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி எழுப்பிய வினாக்களுக்கு தமிழக அரசின் பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டதாகக் கூறி, டி.டி.நெக்ஸ்ட் என்ற ஆங்கில நாளிதழ் சில விவரங்களை வெளியிட்டுள்ளது.

    அதன் மூலம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்கள் 10.50 விழுக்காட்டுக்கும் கூடுதலான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளனர் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது தான் தமிழக அரசின் நோக்கம்.

    தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் முழுமையானவையாக இல்லை; அரைகுறையாகவும், திரிக்கப்பட்டவையாகவும் இருக்கின்றன. அவற்றுக்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள்.

    1. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படும் முதல் தொகுதி பணிகளில் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், வணிகவரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் போன்றவற்றில் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் குறித்து எந்த விவரமும் தமிழக அரசு வெளியிட்ட தரவுகளில் இல்லை.

    2. தமிழ்நாட்டில் தற்போது பணியில் உள்ள துணை ஆட்சியர் நிலையிலான 542 பேரில், 63 பேர் அதாவது 11.60 விழுக்காட்டினர் வன்னியர்கள் என்று தமிழக அரசு கோருகிறது. இது திரிக்கப்பட்ட புள்ளிவிவரம் ஆகும். டி.என்.பி,.எஸ்.சி முதல் தொகுதிக்கான தேர்வு மூலம், 20% இட ஒதுக்கீட்டில் துணை ஆட்சியர் பணிக்கு வன்னியர்கள் எவ்வளவு பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்பதைக் கொண்டு தான் அவர்களின் பிரதிநிதித்துவம் தீர்மானிக்கப்பட வேண்டும். அது தான் சமூகநீதி.

    ஆனால், ஒட்டுமொத்தமாக பணியில் உள்ள வன்னியர்களின் எண்ணிக்கையை தமிழக அரசு அளித்து உள்ளது. அவர்களின் மூன்றில் இரு பங்கினர் வருவாய் ஆய்வாளர் நிலையில் பணியில் சேர்ந்து பதவி உயர்வு மூலம் இந்த நிலையை அடைந்திருப்பார்கள். அவர்கள் ஓரிரு ஆண்டுகள் கூட இந்த பணியில் இருக்க மாட்டார்கள். அவர்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் முதல் தொகுதி பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டதாக கூறுவது பித்தலாட்டம் ஆகும்.

    3. காவல்துறை உதவி ஆய்வாளர் நியமனங்களில் 20% இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள சமுதாயங்கள் எந்த அளவுக்கு பயனடைந்தன என்பது குறித்த விவரங்களை வெளியிடாமல், மொத்தம் 100% இட ஒதுக்கீட்டில் வன்னியர்கள் 10.50%க்கும் கூடுதலான பிரதிநிதித்துவத்தை பெற்று விட்டனர் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. இதை விட மிகப்பெரிய ஏமாற்று வேலை இருக்க முடியாது. அப்படிப் பார்த்தாலும் பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சீர் மரபினர் இணைந்து 14.50% இட ஒதுக்கீடு பெற்றிருக்கிறார்கள்.

    4. ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான புள்ளிவிவரங்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் குறித்த விவரங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் ஆகிய பணிகளில் வன்னியர்களின் பிரதிநித்துவம் குறித்த விவரங்களை அரசு மறைப்பது ஏன்?

    5. தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய இட ஒதுக்கீட்டுப் பிரிவு உருவாக்கப்பட்டது 1989-ஆம் ஆண்டு. அப்போது முதல் இப்போது வரையிலான புள்ளிவிவரங்களை வெளியிட்டால் தான் வன்னியர்களுக்கும், பிற சமூகங்களுக்கும் கிடைத்த உண்மையான பிரதிநிதித்துவம் தெரிய வரும். ஆனால், அதை விடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்களை மட்டும் வெளியிடுவது வன்னியர் சமூகத்தை ஏமாற்றும் செயல் தானே?

    6. தமிழ்நாட்டில் தொகுதி 1, தொகுதி 2 பணிகள் தான் ஓரளவு உயர்ந்த நிலையில் உள்ள பணிகள். அவற்றில் வன்னியர்களின் நிலை என்ன? என்பதற்காக சில புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்...

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையம் நடத்திய முதல் தொகுதி பணிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெற்ற 95 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் பணி ஆணைகளை வழங்கினார். அவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 19 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் வன்னியர்களுக்கு 10.50% வீதம் 11 பதவிகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், கிடைத்ததோ 5 இடங்கள் தான். இது வெறும் 5% மட்டும் தான். இது வன்னியர்களுக்கு போதுமானதா?

    அதேபோல், தொகுதி 2 பணிகளில் 161 காலியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட்டது. அவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் வன்னியர்களுக்கு 17 இடங்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், எட்டுக்கும் குறைவாக இடங்கள் மட்டும் கிடைத்துள்ளன. இது கிடைக்க வேண்டியதில் பாதிக்கும் குறைவு. உண்மை நிலை இவ்வாறு இருக்க வன்னியர்களுக்கு 10.50%க்கும் கூடுதலாக பிரதிநிதித்துவம் கிடைத்து விட்டதாக தமிழக அரசு கூறுவது மோசடி என்பதைத் தவிர வேறு என்ன?

    தமிழ்நாட்டில் 1989-ஆம் ஆண்டுக்கு பிந்தைய 35 ஆண்டுகளில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் ஒவ்வொரு சமூகத்திற்கும் கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்த முழுமையான விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதில் வன்னியர் உள்ளிட்ட அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான பிரதிநிதித்துவம் கிடைத்திருந்தால் அதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு பெரும் மகிழ்ச்சி தான். ஆனால், அந்த விவரங்களை வெளியிட திமுக அரசு காலம் காலமாக மறுத்து வருகிறது.

    அரசு வேலைவாய்ப்புகளில் ஒவ்வொரு சமூகத்திற்கும் கிடைத்த புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டும் என 2020-ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், அந்த விவரங்களை வெளியிட்டால் தமிழ்நாட்டில் சமூகக் கொந்தளிப்பு ஏற்படும் என்று தமிழக அரசும், தேர்வாணையமும் கூறின. ஆனால், இப்போது திடீரென வன்னியர்கள் குறித்த புள்ளி விவரங்களை மட்டும் திரித்து வெளியிட்டிருப்பது ஏன்? இப்போது சமூகக் கொந்தளிப்பு ஏற்படாதா? வன்னியர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைத்து விட்டது என்ற மாயையை ஏற்படுத்துவது தானே அரசின் நோக்கம்.

    எந்த ஒரு சிக்கலையும் திசை திருப்ப வேண்டும் என்றால், அதற்காக எதையும் செய்யத் துணிந்தது தான் திமுக அரசு. அத்தகையதொரு திருவிளையாடலைத் தான் இப்போது அரங்கேற்ற முயல்கிறது. திமுகவின் அனைத்து மோசடி வேலைகளையும் அறிந்தவர்கள் தான் தமிழக மக்கள். அவர்கள் இத்தகைய சித்து விளையாட்டுகளை நம்பி ஏமாற மாட்டார்கள். இதிலும் திமுகவுக்கு தோல்வியே கிடைக்கும்.

    தமிழ்நாட்டில் சமூகநீதியைக் காப்பதில் திமுக அரசுக்கு அக்கறை இருந்தால், 1989-ஆம் ஆண்டு முதல் இப்போது வரையிலான 35 ஆண்டுகளில் ஒவ்வொரு தேர்வணையமும் நடத்திய போட்டித் தேர்வுகள் என்னென்ன? மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசு நிறுவனங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அதில் ஒவ்வொரு வகுப்புக்கான இட ஒதுக்கீட்டிலும் ஒவ்வொரு சமூகமும் பெற்ற பிரதிநிதித்துவம் எவ்வளவு? பொதுப்பிரிவுக்கான 31% இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு சமூகமும் பெற்ற பிரதிநிதித்துவம் எவ்வளவு? என்பது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ராமதாஸ் மற்றும் அன்புமணி வன்னிய சமுதாய மக்களை இனியும் ஏமாற்ற வேண்டாம்.
    • 10.5%ற்கும் மேல் வன்னியர் சமூகத்தினர் பயன்பெற்று வருவது தெரியவந்துள்ளது.

    வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில், கடந்த 2018 முதல் 2022 வரை இடஒதுக்கீட்டின் கீழ் 10.5%ற்கும் மேல் வன்னியர் சமூகத்தினர் பயன்பெற்று வருவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக சென்னை கொண்டையன் கோட்டை மறவன் சங்கத்தைச் சேர்ந்த பொன்பாண்டியன் என்பவர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல ஆணையத்திடமிருந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சில தகவல்களைப் பெற்றுள்ளார்.

    இளங்கலை மருத்துவ இடங்கள்:

    2018 - 2022

    மொத்த இளங்கலை மருத்துவ இடங்கள் - 24,330

    மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் - 4,873

    வன்னியர் சமூக மாணவர்கள் - 2,781 (11.4%)

    வன்னியர் அல்லாத பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் - 1,414 (5.8 %)

    சீர்மரபினர் (DNC) - 678

    முதுகலை மருத்துவ இடங்கள்:

    2018 - 2022

    மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் - 1,363

    வன்னியர் சமூக மாணவர்கள் - 694 (10.2%)

    வன்னியர் அல்லாத பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் - 636 (9.1 %)

    சீர்மரபினர் (DNC) - 279 (4 %)

    உதவி காவல் ஆய்வாளர்கள் (sub-inspectors)

    2013 - 2022

    மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் - 1,919

    வன்னியர் சமூகத்தினர் - 327 (17 %)

    வன்னியர் அல்லாத பிற மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் - 126 (6.6%)

    சீர்மரபினர் (DNC) - 279 (7.9%)

    தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்கள்

    2013 - 2022

    மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் - 8,379

    இடஒதுக்கீட்டில் தேர்வான வன்னியர்கள் - 1,185 (10.9 %)

    மொத்த பணியிடங்களில் 17.1 சதவீதம் பேர் வன்னியர்கள் தேர்வாகியுள்ளனர்.

    2021ஆம் ஆண்டில் மட்டும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள்:

    மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் - 634

    இடஒதுக்கீட்டில் தேர்வான வன்னியர்கள் - 383

    மொத்த பணியிடங்களில் 17.5 சதவீதம் பேர் வன்னியர்கள் தேர்வாகியுள்ளனர்.

    டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 பணிகளுக்கு தேர்வானவர்கள்

    2012 - 2023

    மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் 11.2% வன்னியர்கள் தேர்வாகியுள்ளனர்.

    2013 - 2018

    மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் 13.6 % வன்னியர்கள் தேர்வாகியுள்ளனர்.

    டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பணிகளுக்கு தேர்வானவர்கள்

    2013 - 2022

    மொத பணியிடங்களில் 19.5% வன்னியர்கள் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

    நீதிபதிகள் 

    2013 - 2022

    மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் - 79

    இடஒதுக்கீட்டில் தேர்வான வன்னியர்கள் - 39 (9.9%)

    இந்த தகவல்களை தருமபுரி முன்னாள் எம்.பி. செந்தில் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில், 10.5 % வன்னியர்களுகான இட ஒதுக்கீடு அவர்களின் படிப்பு வேலை வாய்ப்புகளில் இப்பொழுது கிடைக்கும் வாய்ப்புகளை விட குறைவு என்று தொடர்ந்து நான் கூறிவந்த நிலையில் இன்று தரவுகள் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. ராமதாஸ் மற்றும் அன்புமணி வன்னிய சமுதாய மக்களை இனியும் ஏமாற்ற வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த விவகாரம், தமிழகத்தில் பேசுபொருளான நிலையில், இதுதொடர்பாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், "தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்கள் 10.50%க்கும் கூடுதலான பிரதிநிதித்துவம் பெற்று விட்டதாக திரிக்கப்பட்ட, அரைகுறை விவரங்களுடன் கூடிய புள்ளிவிவரங்களை தகவல் பெறும் உரிமை சட்டப்படி பதில்களாக வெளியிட்டுள்ள தமிழக அரசு, இப்போது அடுத்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

    தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களை தொகுத்துள்ள தமிழக அரசு, அதை தமிழக அரசின் செய்திக்குறிப்பு என்ற குறிப்பு இல்லாமல் அனாமதேய செய்தி போன்று பிரைவேட் நியூஸ் என்ற பெயரில் அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி செய்தி வெளியிடும்படி கட்டாயப்படுத்துவதாக ஊடக நண்பர்கள் சிலரே என்னிடம் குறைபட்டுக் கொண்டனர்.

    திமுக அரசு மேற்கொண்டு வரும் வன்னியர் சமூகநீதி படுகொலையில் ஊடகங்களையும் கூட்டாளிகளாக்கக் கூடாது; அந்த பாவத்தில் பத்திரிகையாளர்களையும் பங்கேற்கச் செய்யக் கூடாது. இது போன்ற மோசடிகளை அரங்கேற்றுவதன் மூலம் வன்னியர்களுக்கு கூடுதலாக பிரதிநிதித்துவம் கிடைத்து விட்டது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த தமிழக அரசு முயன்றால் அதற்கு கிடைக்கப் போவது படுதோல்வி தான்.

    தமிழக அரசுக்கு உண்மையாகவே சமூகநீதியில் அக்கறை இருந்தால், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதனடிப்படையில் அனைத்து சமுதாயங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க முன்வர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை மக்கள் புறக்கணித்து விட்டார்கள்.
    • பா.ஜ.க.விற்கு கால் பிடிக்கும் வேலையை செய்கின்றது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாசிச அரசியல், மதவாத அரசியல், ஜாதி அரசியலை, முன்னெடுத்த பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை மக்கள் புறக்கணித்து விட்டார்கள்.

    நாட்டு மக்கள் விரும்புவது நாட்டின் முன்னேற்றம், வளம், சமூக வளர்ச்சி, ஆகியவற்றை முன்னெடுத்த திராவிட நாயகன் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சமூக கட்டமைப்பு வளர்ச்சியைத்தான். இதனால் தான் இந்திய அளவில் 40-க்கு 40 தொகுதியிலும் வெற்றியினை பெற்று மகுடம் சூட்டி உள்ளனர்

    சமூக நீதிக்கு எதிரான பா.ஜ.க. கட்சியுடன் பா.ம.க. கட்சி கூட்டணி சேர்ந்து, பா.ஜ.க.விற்கு கால் பிடிக்கும் வேலையை செய்கின்றது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட சட்டசபையில் தனி தீர்மானம் நிறைவேற்றியுள்ள முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினால் மட்டுமே வன்னிய மக்களுக்கு பல நல்லதிட்டங்களையும், சிறந்த இட ஒதுக்கீட்டையும் வழங்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அலங்கியம் ,தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 5000 கடிதங்கள் முதல்வரின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
    • மாநில செயற்குழு உறுப்பினர் கந்தசாமி,ஒன்றிய தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற கோரி அலங்கியம் தபால் நிலையத்தில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 2,000 கடிதங்களை பா.ம.க. அலங்கியம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமையில்மாவட்ட செயலாளர் அ. ரவிச்சந்திரன் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் அலங்கியம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்பிரமணி,ஒன்றிய துணைச் செயலாளர் ரங்கநாதன், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கவிதா உள்ளிட்ட50க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் ஊர்வலமாக வந்து அலங்கியம் தபால் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தபால் பெட்டியில் கடிதங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் மற்றும் நீதிபதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் கூறுகையில்,அலங்கியம் ,தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 5000 கடிதங்கள் முதல்வரின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்துஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ெரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கு ஒரு நிமிடம் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    இதில் தாராபுரம் நகரச்செயலாளர் பிரவீன்,நகர இளைஞர் அணி குருநாதன், இளைஞர் அணி பொறுப்பாளர் பொன்ராஜ், தாராபுரம் மேற்கு ஒன்றிய தலைவர் பொதிகை ரங்கநாதன், நகரத் தலைவர் பரமேஸ்வரன், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் அமராவதி,ஒன்றிய மகளிர் அணி செயலாளர் பானுமதி மற்றும் சாரதாமணி,ராஜாமணி,மாநில செயற்குழு உறுப்பினர் கந்தசாமி,ஒன்றிய தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் வன்னியா்கள் வாழ்ந்து வருகின்றனா்.
    • போராட்டத்துக்கு பின்னா் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை நிறைவேற்றக்கோரி தமிழக முதல்வருக்கு பா.ம.க., சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

    திருப்பூா் மாநகா் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் ெரயில் நிலையம் எதிரே உள்ள தபால் நிலையத்தில் இருந்து தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பபட்டது. இந்த நிகழ்வுக்கு அக்கட்சியின் மாநகா் மாவட்ட செயலாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:-

    தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் வன்னியா்கள் வாழ்ந்து வருகின்றனா். கடந்த 2020-21 ம் ஆண்டில் நடத்தப்பட்ட போராட்டத்துக்கு பின்னா் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.இதற்கு உயா்நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் உச்சநீதிமன்றம் தடை இல்லை என்று தீா்ப்பளித்துள்ளது. ஆகவே இந்த கல்வியாண்டிலேயே 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை நிறைவேற்றி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றனா்.

    ×