search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரத்த சோகை"

    • நோய்தொற்று காரணமாக ஏற்படும் இரத்த சோகை, குரோனிக் அனீமியா என்று அழைக்கப்படுகிறது.
    • இரத்த சோகை என்பது உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியை பாதிக்கும் மிகவும் பொதுவான நோயாகும்.

    இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவதால் இரத்த சோகை ஏற்படுகிறது. இதனை ஹீமோகுளோபின் குறைபாடு என்றும் கூறுவர். ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் அளவையாகும்.

    போதியளவு பிராணவாயு சுவாசிக்காததால் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. சுவாசத்தில் பிராணவாயு குறைந்தால் மயக்கம் மற்றும் முச்சுத்திணறல் ஏற்படும். இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது ஏற்படுவது வழக்கமாகும்.

    இரத்த சோகையில் 3 வகைகள் உண்டு. வைட்டமின் C மற்றும் B-12 குறைபாடு காரணமாக ஏற்படும் இரத்த சோகை, வைட்டமின் குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை என்று அறியப்படுகிறது. அதே போல, இரும்புச்சத்து குறைபாடு காரணமாகவும் இரத்த சிவப்பணுக்கள் குறையலாம். இதனை இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை என்று கூறுவர். நோய்தொற்று காரணமாக ஏற்படும் இரத்த சோகை, குரோனிக் அனீமியா என்று அழைக்கப்படுகிறது.

    இரத்த சோகை என்பது உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியை பாதிக்கும் மிகவும் பொதுவான நோயாகும். பல சந்தர்ப்பங்களில், இது லேசானது மற்றும் அறிகுறியற்றது மற்றும் மேலாண்மை தேவையில்லை.

    வயதுக்கு ஏற்ப நோய்த்தாக்கம் அதிகரிக்கிறது மற்றும் இனப்பெருக்க வயதுடைய பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு இது மிகவும் பொதுவானது.

    85 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் 20%க்கும் அதிகமானோர் இந்த பாதிப்பு உள்ளது. முதியோர் இல்ல மக்கள் தொகையில் இரத்த சோகை பாதிப்பு 50%-60% ஆகும். வயதானவர்களில், ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு நோயாளிகள் இரும்பு, ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி 12 குறைபாடு போன்ற இரத்த சோகைக்கு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உள்ளனர். மற்றொரு மூன்றில் ஒரு பங்கு நோயாளிகளில், சிறுநீரக செயலிழப்பு அல்லது நாள்பட்ட அழற்சிக்கான சான்றுகள் உள்ளன.

    வயது மற்றும் பாலினம் தவிர, இனம் இரத்த சோகையின் முக்கிய நிர்ணயம் ஆகும், ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள்தொகையில் பரவல் அதிகரித்து வருகிறது.

    இரத்த சோகைக்கான அறிகுறிகள்

    * மயக்கம்

    * உடற்சோர்வு

    * தலைவலி

    * தோல் வெளுத்தல்

    * உடல் வெப்பம் குறைதல்

    * பசியின்மை

    * நெஞ்சுவலி

    * சீரற்ற இதயத்துடிப்பு

    * வாய் மற்றும் நாக்கில் வீக்கம்

    * முச்சுத்திணறல்

    இரத்த சோகை ஏற்பட காரணங்கள்

    * வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு

    * தன்னெதிர்ப்பு நோய்கள் (autoimmune disorders)

    * இரத்தப்போக்கு

    * மருந்து, மாத்திரைகள்


    இரத்த சோகை யாரை பாதிக்கும்?

    * மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு உள்ளவர்கள்

    * கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள்

    * வைட்டமின், இரும்புச்சத்து குறைவாக எடுத்துக்கொள்வோர்

    * குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள்

    இரத்த சோகை குணமாக்க சில வழிமுறைகள்

    * இரும்புச்சத்து அதிகமுள்ள பயறு வகைகள், சோயா பன்னீர், பச்சை நிறக் காய்கறிகள், மாதுளைப் பழம், முருங்கைக் கீரை, பீன்ஸ், உருளைக்கிழங்கு, ஆலிவ் ஆகிய உணவுகள் சாப்பிடவும்.

    * வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடவும்.

    * தேவைப்பட்டால் மருத்துவர் பரிந்துரைக்கும் ஊட்டச்சத்து மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.

    * இரத்த சோகைக்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரைக்கும் உட்டச்சத்து உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

    • கர்ப்பகாலம் முழுவதும் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
    • இரத்த சோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும்.

    இரத்தத்தில் இரும்பு சத்து (Iron), விட்டமின் பி (Vitamin B) சத்துகள் குறைவாக இருந்தாலோ இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைந்து காணப்பட்டாலோ, இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவதாலோ இரத்த சோகை ஏற்படுகிறது.

    உடலுக்கு கொண்டு செல்லும் ஆக்சிஜனை உடலின் மற்ற உடல் உறுப்புகள் மற்றும் அனைத்து பாகங்களுக்கும் எடுத்து செல்லாமல் தடை ஏற்பட்டு விடுகிறதல்லவா இதனால்தான் இதை 'இரத்த சோகை நோய்' என்கிறார்கள்.

    கர்ப்பக்காலத்தில் ஆரோக்கியமாக இருந்தால் தான் குழந்தையும் பிரசவ நேரத்தில் தாயும் நலமாக இருக்கமுடியும். கர்ப்பக்காலம் முழுவதுமே சத்துக்கள் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும் இல்லையென்றால் குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடு நேரலாம். ஆனால் குறையவே கூடாது என்று சொல்லகூடிய சத்து என்றால் அது இரும்புச்சத்து தான். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த சத்து குறைபாடு கொண்டிருக்கும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே போகிறது.

    கர்ப்பகாலத்தில் அவசியமான சத்துகளில் முதன்மையானதும் முக்கியமானதும் இரும்புச்சத்து தான். கர்ப்பகாலம் முழுவதும் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துகொள்ள வேண்டும். இதனால் பிரசவக்காலம் சிக்கல் இல்லாமல் இருக்கும்.

    கர்ப்பக்காலத்தில் குழந்தையின் ஆரோக்கியத்தை காக்க அதிகப்படியாக உடல் உறுப்புகள் வேலை செய்கின்றன. அதனால் வழக்கத்தை விட இரண்டு மடங்கு அளவு இரும்புச்சத்து தேவையாக இருக்கிறது. இரும்புச்சத்து நிறைந்த உணவு பொருள்கள் மற்றும் மாத்திரைகள் வழியாக இவை பூர்த்தியடயாத போது கர்ப்பிணிகள் இரத்த சோகை பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள்.

    இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய வெள்ளை அணுக்களின் உற்பத்தி தடுக்கப்படுகிறது. மேலும் வைட்டமின் பி, ஃபோலிக் ஆசிட் சத்தும் குறையும் போது இரத்த சோகை மேலும் தீவிரமாகிறது. இதை அலட்சியப்படுத்தும் பெண்கள் கர்ப்பக்காலம் முழுவதுமே இந்த பிரச்சனையை கொண்டிருந்தால் சமயத்தில் அது குழந்தையின் உயிரையோ அல்லது தாயின் உயிரையோ பறித்துவிடும் வாய்ப்பும் உண்டு என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

    பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களாலும் ரத்த இழப்பாலும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. அதற்கு காரணம் இரத்த சோகை.

    மரபியல் வழியாகத் தாய் குள்ளமாக இருப்பதாலும் இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்த சோகை ஏற்பட்டு தாய் பிரசவத்தின் போது இறக்கும் அபாயம் (Maternity Death) அதிகரிக்கிறது. இந்த பிரச்னைகளால் ஏற்படும் இறப்பு விகிதம் 20%.

    இரத்த சோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும். அதனால் அந்த தாய் குறை பிரசவம் (Early delivery) அல்லது குறைந்த எடையுள்ள குழந்தையை (under weight babies) பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஒரு யூனிட் அளவு அதிகரித்தால் குழந்தை இறக்கும் அபாயம் 24% சதவிகிதம் குறையும் என ஒரு ஆய்வு கூறுகிறது.

    இரத்த சோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.

    ×