search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்ப பரிசோதனை"

    • கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.
    • கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக வேலை இல்லை.

    சீனாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் பெண்கள் பிரசவகால விடுப்பு தவிர்க்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள ஜிங்சு மாகாணத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யும்போது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.

    அதோடு நிற்காமல் நேர்முக தேர்வுகளின் போது பெண்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்கிறார்கள். அப்போது பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா என்பதை அறிய கர்ப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.

    இதில் பெண்கள் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக வேலை இல்லை என கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

    அதோடு நிற்காமல் குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள் பற்றியும் கேள்விகள் கேட்கப்ப டுகின்றன. ஏற்கனவே குழந்தைகள் பிறந்து இருந்தால் கண்டிப்பாக குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்படுகிறது. இது குறித்து ஆன்லைன் மூலம் அரசு கவனத்திற்கு சிலர் கொண்டு சென்றனர்.

    அப்போது 16 நிறுவனங்களில் சட்டவி ரோதமாக 168 பெண்களுக்கு உடற் பரிசோதனை என்ற பெயரில் கர்ப்ப பரிசோதனை செய்தது கண்டுபி டிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கையுடன் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மணப்பெண்களுக்கு குறிப்பிட்ட நோய் பாதிப்பு தொடர்பான மருத்துவ பரிசோதனை மட்டுமே நடத்தப்பட்டது.
    • கர்ப்ப பரிசோதனை நடத்துவதற்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என திண்டோரி மாவட்ட கலெக்டர் விகாஸ் மிஸ்ரா மறுத்துள்ளார்.

    போபால்:

    மத்திய பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் மாநில அரசு சார்பில் 219 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. கடாசரை நகரில் நேற்று முன்தினம் நடந்த இந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளுக்கு தலா ரூ.56 ஆயிரம் நிதியுதவியும் அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

    இது ஏழைகளை அவமதிக்கும் செயல் எனக்கூறியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஓம்கார் சிங், எந்த விதிமுறைகளின் கீழ் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது? என்பதை அரசு விளக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    ஆனால் கர்ப்ப பரிசோதனை நடத்துவதற்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என திண்டோரி மாவட்ட கலெக்டர் விகாஸ் மிஸ்ரா மறுத்துள்ளார். அந்த மணப்பெண்களுக்கு குறிப்பிட்ட நோய் பாதிப்பு தொடர்பான மருத்துவ பரிசோதனை மட்டுமே நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

    அப்போது சில பெண்கள் மாதவிலக்கு பிரச்சினை இருப்பதாக கூறியதால், மருத்துவக்குழுவினரே அந்த பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்தியதாகவும், இதில் 4 பெண்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததால், அவர்களை திருமணத்துக்கு அனுமதிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

    ×